CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, June 8, 2009

அர்த்தமற்ற கவிதை.....

அந்த வறண்டுபோன
பொட்டல்காட்டில் தனித்திருக்கும்
இலையுதிர்த்த மரத்திற்கு

எப்பொழுதாவது
இளைப்பாற தஞ்சமடையும்
பறவைகளை போலவே

நடுநிசி தாண்டியும்
வெறிகொண்டு அலையும்
என் தனிமைகளுக்கு

எப்பொழுதாவது
நினைவில் வந்து போகும்
உன்னுடனான நிகழ்வுகள்!

பெற்றக்குழந்தைக்கு
தாய்ப்பால் கொடுக்க மறுக்கும்
உடலழகு விரும்பியின் உதவாத

சதைப்பிண்டமாகவே
உன் அழிசாட்சியங்கள் என்னில்
பெரும்பாலும் உணரப்படுகிறது!

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: