CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, October 15, 2009

பெண் சமைத்தான் பிரம்மன்



பூவிதழ்களை
குழைத்தெடுத்து
பூமகளிவள் மேனியென
மெல்தூரிகையால்
வர்ணம் கொண்டு தீட்டியே
அன்னத்தின் வர்ணத்தை
பற்களுக்கென
பறித்து கொடுத்து
அழகென இவளைமட்டுமே
அவன் படைத்துவிட்டான்!

மீன்விழிப்பார்வையிலே
மான் துள்ளல் போடுமென்
மனமதை
மயக்கும் புன்னகையால்
மட்டுறுத்தி விடுகிறாள்!

இவளை
வர்ணிக்கவே
வார்த்தைகளின்றி
வறண்டு போகிறதென்
செந்தமிழ்!

பெண்ணென
தேவதையை சமைத்துவிட்டான்
பிரம்மன்!

தேவதையை
பெண்ணென சமைக்கதுடிக்கிறதென்
கவிதைகள்!!!

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

Tamil Home Recipes said...

நல்ல கவிதை