CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, October 21, 2009

பிரிவின் கரங்கள்.


*
உன்னில்
தொலைந்து போகவென்று
லயித்திருந்த பொழுதொன்றில்
சலனமில்லாமல்
நுழைந்துவிட்டது
பிரிவின் கரங்கள்..

*

மௌனங்களை
மட்டுமே
பேசும் கரங்களின்
தீண்டல்
தீயின் சுவையை
நாவெங்கும் தடவி
வார்த்தைகளை எரித்துவிடுகிறது..

*

மெல்லிசையின்
செவிகளை அடைத்துவிட்டு
யாருமற்ற
பாலையொன்றில்
இழுத்து செல்லும்
இந்த கரங்களின் அழுத்தம்
மரணவலியுடையதாய் இருக்கிறது!

*
நீ
எப்போதும் போலவே
அழகாய் சிரித்துக்கொண்டிருக்கிறாய்...

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: