CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, April 30, 2007

01-06-06

*இன்று
என்னவளுக்கும்
எவனோ ஒருவனுக்கும்
நிச்சயதார்தமாம்

*இன்னுமொரு
பெரிய திருப்பம்
என் வாழ்வில்.

*இழந்தது போதவில்லை
போலும்
பிரிந்துவிட்டாள்
அவளும்

*குமுறுகிறது மனம்
அழுகிறது மனக்கண்கள் -மூட
மறுக்கிறது நிஜக்கண்கள்

*கனவிலே நினைவாகி
நின்றவள்
நிஜத்திலே கனவாகிப்
போனாள்

*கண்களில் காதலாய்
வந்தவள்
கண்ணீரில் கரையவிட்டுப்
போனாள்

*பவுர்ணமி என்று வர்ணித்தேன்
அவளை- நிலவு தேய்ந்து விடும்
என்பதை
மறந்து - ஆம்
மறைந்துவிட்டாள்

*எத்தனை
இன்னல் வந்தாலும்
இணைவோம் என்றாள்.
இணந்துவிட்டது இன்னல்
என்னோடு
இணைந்துவிட்டாள் அவள்
இன்னொருவனோடு

*அவன் எழுதியது நடக்கும்
என்றாள் அன்றே
அவள் அறியாமல் போனால்
தவறில்லை
அவள் மனம் மாறுமென்று
அறியாளோ?
அறிந்தும் கூறாமல் போனதன்
காரணமென்னவோ.

*மாற்றான் கண்பட்டது போலும்
என் வாழ்வில்
மாறியது அவள்
மனம் சட்டென்று

*மாற்றத்தால் அவளறியாள்
என் இன்னலை
மாற்றம் கண்டுதான்
எனக்கும் புரியலை

*காலத்தை காரணம்
காட்டுகிறாள் அவள்
கடந்துவிட்ட வாய்ப்பை
தேடுகிறேன் நான்

*தாய் தந்தை கஸ்டம்
என்கிறாள் அவள்
என்னித்தனைக்கால நஸ்டம்
புரியவில்லை அவளுக்கு

*இன்னலை தேடிப்போனேன்
நானே -இனியவளே என்று
இன்னமும் ஆறலையடி மனது
வடுவாகிப்போனதடி உன் நினைவு

*கால் போனதிசை போகிறது
உடல்
மனம் போனதிசை போகிறது
உயிர்

*உயிரெங்கே தேடினால்
உனதருகே
நீ எங்கே தேடினால்
அவனருகே

*நினைக்க மறுக்குதடி மனமும்
சகிக்க முடியலையடி அதையும்
இறக்க நினைக்குதடி உயிரும்
மறக்க சொல்லுதடி நண்பர் கூட்டம்

*அவரும் அறிவார் காதல்வலி
ஆயினும் தருவார் ஆறுதல்

*இதயத்தில் உன்னை சுமந்ததால்
நானும் ஆனேன் தாயாய்

நீயும் ஆனாய் தாரமாய்
அவனுக்கு
வலிக்குதடி
எனக்கு

*நானும் சுமக்கிறேன்
குழந்தையாய் உன்னை
நீயும் சுமப்பாய்
குழந்தையாய் அவன் வித்தை

நெஞ்சம் கூசுதடி நினைத்தால்
தூக்கமும் வரலையடி படுத்தால்

*இன்பம் போல் தெரிந்து
துன்பம் மட்டும் தந்தவளே
இனியாவது இன்பம்
தருவாய் அவனுக்கு

*உன் மனம் ஒரு
குரங்கு
தயவு செய்து
இரங்கு

என்
ஆணினம் பாவம்
ஆக்கிடாதே சவம்

*தவமிருந்தேன் வரமாய்
உன்னை பெற
கடவுள்தான் இல்லையடி
வரம் தர

*வெளியே சிரிக்கிறேன்
உள்ளே அழுகிறேன்
நானும் ஆனேன் என்னவோ

*என்
பிறை நிலவே
குறை தவமே
அறை மனமே
அகல் விளக்கே
பகல் கனவே
நகல் பொருளே

மொத்தத்தில்
நிரந்தரமில்லாதவள்
நீ
நிலைகுலைந்து போனேன்
நான்.

*சிந்தும் தூரலில்
சிறகடித்து வந்தாள்
- காண கண்கோடி தேவை என்றேன்
கொட்டும் மழையில்
நொறுங்கடித்து போனாள்
- நிற்க தெருக்கோடி கிடைத்தது தான்
அழகு
கோடியை கொடுத்தவன்
கேட்டதை கொடுக்கலையே

*அழகு
ஆபத்து என்றான்
அன்றே கவின்ஞன்

அப்போது கண்டித்தேன் நான் அவனை
இப்போது துண்டித்தாள் இவள் என்னை

*அலசியதில் புரிந்தது
அழிவு தான்
அழகு என்று.....................

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: