CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, April 26, 2007

தோல்விகள்

.முத்தமிழ் மன்ற போட்டியில்

முதல் பரிசு பெற்றவன்

முதல் முறையாய் தோற்றேன்..

சந்தனச்சிலையாம் உன்னை

சந்தித்த முதல் நாள்..

. உடற்பயிற்சி போட்டியில்

முதல் பரிசு பெற்றவன்

இரண்டாம் முறையாய் தோற்றேன்

கண்ணழகியாம் உன்னை

காதலித்த முதலாய்........

. ஆண்டுத்தேர்விலும்

அதிக மதிப்பெண் பெற்றவன்

மூன்றாம் முறையாய்

முழுதும் தோற்றேன்

பதுமையாம் நீ - என்மேல்

பாசம் வைத்த முதலாய்.......

பள்ளி முடிந்தது

பயணம் தொடருமா ?.- என்றதற்கு

. கல்லூரிக்கு போகாதே

கல்யாணம் பண்ணிக்கலாம்.

கம்பெனிக்குப்போ- என்றாய்

காலூன்றமுடியாமல் நான் பட்ட

கஸ்டங்கள் நீ அறிவாய்...

.உன் உள்ளம் போல் வாழவைக்க

உன்னவன்

உழைத்தேன்

உயர்ந்தேன்

உன்னை கண்டபின் முதல் ஏற்றம்

என்னில்.....- மகிழ்ச்சி

.மகிழ்ச்சியுடன் வாழ்ந்தவனை

மணம் முடிக்க அழைப்பாய்

-என்றிருந்தேன்

மாமனோடு திருமணம்

மறக்காமல் வந்துவிடு என்று

மனம் கூசாமல் சொன்னாய்.......

.ஏழரை வருடம் காதலித்து

எட்டு வார இடைவெளியில்

எப்படீயடி

என்னை மறந்தாய்....

.ஜெயிக்க மட்டுமே

ஜனனம் எடுத்தவன் உயிருள்ள

ஜடமாய் இந்த

ஜகத்தினில்..........

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: