CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, April 29, 2007

காதலை சொல்லி........ காத்திருக்கிறேன்..........

. இனியவளே
உன்னிடம் உதிர்த்த
ஓரிரு வார்த்தைகளுக்கு
என் மனம்
எத்தனை ஒத்திகை
பார்த்திருக்கும்..

.அவற்றை எல்லாம்
போற்றி
பாதுகாக்குமே
என் சிந்தை

.நீரின்றி மீன்களா?
அன்பே
உன் நினைவுகளின்றி
என் கவிதைகளா?

.வடிவமின்றி
நிழல்களா?

.ஆம் அன்பே
இந்த நிழலுக்கு
வடிவம் கொடுக்க
நீ உதிர்க்கும்
வார்த்தைகளுக்கு
காத்திருக்கிறேன்....

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: