சிவா ஆனந்த கண்ணீரோடு மழையில் நனைய தொடங்கினான்.அவனுக்கு இது முதல்மழையாய் தெரிந்தது...
Friday, September 26, 2008
முதல்மழை
சிவா ஆனந்த கண்ணீரோடு மழையில் நனைய தொடங்கினான்.அவனுக்கு இது முதல்மழையாய் தெரிந்தது...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:57 AM 2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை சிறுகதை
Thursday, September 25, 2008
ஒரு சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:01
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 9:53 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை என்காதல்
Tuesday, September 23, 2008
சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:00
என்னுடைய இதயம் சிதைக்கபடாமல் இருந்தது.முன்னொரு காலத்தில்.அது எனக்கு வசந்தகாலங்களாய் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் என்னை எதிர்நோக்கி கொண்டிருப்பதாய் இருந்தது,ஆம் அப்போதெல்லாம் உன்னுடன் நான் இருக்கும் ஒவ்வொரு நொடிகளையும் இதயத்தில் செதுக்கி வைத்துகொண்டிருந்தேன்.
அப்படி தான் நீயும் என்னில் நுழைய ஆரம்பித்திருந்தாய்.
சொல்லமுடியாத வலிகளை காணும்போதெல்லாம் காதல் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவனை திட்டி தீர்த்துகொண்டிருக்கும்.
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:46 AM 3 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை என்காதல்
Thursday, September 18, 2008
மழையும் பெண்ணின் முத்தமும்
திடீரென்று பெய்யும்
மழையில் ஒதுங்கி
நிற்கிறேன்!
திருக்கோயில் தேவதை
நீ நனையாத வரைக்கும்!
*******************************************
அந்த நனைதலின்
முடிவில் குளிரின்
தன்மை போக்குவதாய்
தரப்பட்ட முத்தத்தின்
வெம்மையில் மழையை
திரும்பவேண்டுகிறேன்!
***********************************************
பூங்காவில் அமர்ந்திருந்த
அந்த தருணத்தில் வந்துவிட்ட
மழையினை பொருட்படுத்தாமல்
மனம் விட்டு பேசியிருந்தோம்!
உதடுமட்டும் விட்டதாயில்லை!
**************************************************
மழையை நான் ரசிப்பதற்கு
காரணம் கேட்கிறாய் நீ!
நான் மழையை விட
அதில் நனையும் உன்னை
ரசிப்பதற்கு ஆயிரம் காரணங்கள்
சொல்லுவேன் என தெரிந்தே
****************************************************
ஜன்னலோர மழைதுளி
கொஞ்சல்களில் உன் முகபாவங்களை
ரசித்து கொண்டேயிருக்கலாம்.
இயற்கையின் விசித்திரபடைப்பை
**************************************************
பெரும்பாலான மழைநேரங்களில்
மழை வரும் போது ஆரம்பித்திருப்போம்
முத்தத்தை மழையாய் நாம்!
மழை விட்டிருந்தாலும்
விட்டிருக்காது முத்தமழை!
********************************************************
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:42 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
நிலாப்பெண்...
பெரும்பாலானோர்
நிலாச்சோறு தின்றிருக்கலாம்!
நான்
மட்டும் தான்
நிலவின் கையாலே
சோறு உண்கிறேன்!
************************************************
எல்லாருக்கும்
அமாவாசை வந்திருக்கும்!
எனக்கு மட்டும்
வருவதாகவே இல்லை
தினம் உன் தரிசனத்தால்!
*************************************************
கதிரவனையும்
நிலவையும் ஒருசேர
பார்க்கமுடிகிறது
நீ வரும் போது மட்டும்!
*************************************************
நிலவை முதலில்
தொட்டது வேண்டுமென்றால்
ஆம்ஸ்ட்ராங்காக இருக்கலாம்!
நிலவை
தொட்டுக்கொண்டே இருப்பது
நான் மட்டும் தானே!
***************************************************
எல்லாருக்கும்
சூர்யோதயமே விடியலாயிருக்கும்!
எனக்கு மட்டுமே
சந்திரோதயம் விடியலாய்
இருக்கும்!
எனதறையில் உன்புகைப்படம்!
*****************************************************
நிலாவில்
கால்பதிக்க எத்தனையோ
பேர் ஆசைபடலாம்!
நிலாவில்
உதடுபதிக்க மட்டும் தான்
எனக்கு ஆசை!
*****************************************************
சந்திரகிரகணத்தன்று
யாரும் நிலவை
பார்க்க கூடாதென
செய்தி படிக்கிறேன்!
நிலவை அருகில்
பார்த்து கொண்டு!
********************************************************
நிலவை பெண்ணாய்
உருவகித்து எத்தனையோ
கவிதைகள் வந்திருக்கும்!
நிலவே உருவமென்று
நான் எழுதிகொண்டிருக்கிறேன்
உன்னை பற்றி!
******************************************************
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:42 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Monday, September 15, 2008
சிதைவுறும் மனவெளி..
என் மனவெளியானது
விரிந்தும் விசாலமானதாகவுமே
இருக்கிறது..
சந்தோசங்களையும்
துன்பங்களையும் தாங்ககூடியதாகவே
இருக்கிறது!
தாங்கி கொண்டும்
தான் இருக்கிறது!
அதிகபட்ச சந்தோசங்களை தாங்கிய
ஒரு காலையும்
அதிகபட்ச துன்பங்களை தந்துபோன
ஒரு மாலையும்
என் மனவெளிக்குள்
பயணம் செய்கையில்
கனம்தாங்க முடியாத மனவெளியானது
பின்னிரவில் வெடித்து சிதறி
ஒரு வட்டத்துக்குள்
விழுந்துவிடுகிறது!
சிதறிய நினைவுகளை கோர்த்து
வட்டத்துக்குள்ளாகவே பயணம்
செய்துகொண்டிருக்கும் மனவெளியின்
தொலைந்து போனதொரு
நினைவலையை தேடி
வட்டம் தாண்டி பயணிப்பதற்காய்
மீண்டும் வெடித்து வெளித்தள்ள
பட்டது இன்னொரு வட்டத்தில்!
வட்டங்களை உருவாக்கி கொண்டிருக்கிறது கல்!
குளம் தாங்கிய படியே இருக்கிறது!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:47 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
எரிந்துகொண்டிருக்கிறது ஒரு கவிதை
அந்த கவிதை
அவர்களால் தான்
படைக்கப்பட்டது
எனக்கு
பிடித்தமானதால்
அந்த கவிதை
என்னால் ரசிக்கபட்டது!
ரசித்தலின் ஆழத்தில்
அந்த கவிதை
என்னால் காதலிக்கப்பட்டது!
அந்த கவிதையும்
என்னை காதலித்திருந்தது!
படைத்தவர்களின்
வலியுறுத்தலோ வற்புறுத்தலோ
அந்த கவிதை
என்னிலிருந்து பிடிங்கபட்டது!
ஆம்
அந்த கவிதை
வேறொருவனுக்கு
கொடுக்க பட்டுவிட்டது!
அந்த கவிதை
அவனால் அனுபவிக்கபட்டது!
இல்லை இல்லை
அந்த கவிதை
அவனால் கசக்கபட்டிருந்தது!
அவனின்
ரசனையில்லாமையால்
அந்த கவிதை
எரிந்து கொண்டிருக்கிறது!
ஆம் எரிந்து
கொண்டிருக்கிறது
என் மனமும்! காதலும்!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:35 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
காதிலிக்க கற்றுக்கொள்!!
எல்லாம் இருந்தும்
தொலைந்து போயிருந்தது
இன்றைய நாளின் மகிழ்ச்சி
நீ வராததால்!
*****************************************
யாதுமற்ற ஒருபொழுது
எல்லாம் தந்து சென்றது..
நீ வந்து போனதால்
********************************************
காதலிக்க கற்றுகொள்வதாய்
ஆரம்பித்த என் தேடலில்
முதலில் கண்ணில் பட்டது
உன் கடைக்கண் பார்வை..
காதலிக்க கற்றுகொள்கிறேன்
இப்போது
********************************************
ஒரு வருடபிரிவின் முடிவில்
நீ தந்த முத்தத்தின் ஈரம்
ஒரு வருடத்தின் முன்
நீ தந்த முத்தத்தின் வறட்சியை
ஈரமாக்கி விட்டது..
இன்னும் நீ என் உதட்டை விடுவதாயில்லை
நானும் தான்!
**********************************************
உன் வருகையை
எதிர்பார்த்திருக்கும் என் பொழுதுகளுக்கு
பொழுதுபோக்கு நேற்றைய
உன் பார்வையும் கொஞ்சல்களும் தான்
காத்திருத்தலும்
அதிலுள்ள சுகங்களையும்
கற்றுகொண்டிருக்கிறேன்
************************************************
செய் !
எதாவது செய்!
பாடலை கேட்கும் [போதெல்லாம்
நேற்றைய அந்த
அழுத்தமான முத்தம் நினைவில்
வரமால் இல்லை
************************************************
காதலை முழுமையாய்
கற்றுகொள்ள ஆசை!
உன்னை உடனடியாய்
மணமுடித்து
கொள்ள சொல்கிறது காதல்!
***************************************************
காதல் சொன்னபடி
செய்து முடித்தாயிற்று
எனக்கே சொந்தமாகி
போயிருக்கிறது காதல்!
*
*
*
*
காதலிக்க கற்றுகொள்!
*******************************************************
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:38 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Friday, September 12, 2008
அனுதாபமில்லாத மனிதன் நான்.....
என்னால்
இப்போது அனுதாபபடக்கூட
முடியவில்லை!
ஒரு சமூகமே
உரிமையிழந்ததல்லாமல் உயிரையும்
இழந்துகொண்டிருக்கிறார்கள்!
என்னால்
இப்போதும் அனுதாபபடக்கூட
முடியவில்லை!
சமூகத்துக்காய் போராடிய
போராளியொருவனின் படை
அரசியல் சித்துவிளையாட்டுகளில்
செத்துவிட்ட ஒருவருக்காய்
தடை செய்யப்படிருப்பதில் வருத்தமில்லை!
ஒரு சமூகமே
இன்றளவும் அழிந்து கொண்டிருக்கையில்
அனுதாப படக்கூட முடியவில்லை
என்பதில் எனக்கு வருத்தம் தான்!
எதிர்த்து பேசிவிட
துணிவில்லாமல் இல்லை
எதிர்த்து பேசிவிட
துணை தான் இல்லை..
சட்டம் திட்டம் போட்டு
எனை சிக்கலுக்குள் ஆழ்த்தலாம்
என அறிவுரைகள் வீழ்த்திவைக்கிறது!
அனுதாப பட்டால் கூட
சட்டசிக்கல் வந்து கொக்கரித்து
கூப்பாடு போடுமென்றால் எப்படி?
சாபம் பெற்ற சமூகம் அழிய
தூபம் போடுபவன் தலைவன்
கோபபடுபவன் தீவிரவாதி! -அனு
தாபப்படுபவன் ??????????
என்னால்
இப்போது அனுதாபபடக்கூட
முடியவில்லை!
சட்டத்தை திருத்த முயலவேண்டாம்!
சட்டத்தை திருப்ப முயலாமலிருங்கள் போதும்!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 8:20 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Thursday, September 11, 2008
அது வனாந்திரமாயிருக்கலாம்.....
அந்த இடம் இப்போது
வனாந்தரமாகியிருக்கிறது.
நான் வழக்கமாய் செல்லும்
இடம் தான் அது!
இருளில் மூழ்கிய ஓங்கி
உயர்ந்த மரங்கள் விசித்திரமாய்
காட்சியளிக்கின்றது!
பாதைகளில் உள்ள பள்ளங்களை
என்னால் அறியமுடியவில்லை
மனிதர்கள் அங்கிருப்பார்களா
என சந்தேகத்துடன் இன்னும்
உள் நுழைகிறேன்!
மின்மினி பூச்சிகளோடு
போட்டியிடமுடியாத வெளிச்சங்கள்
ஆங்காங்கே தெரியாமலில்லை
நம்பிக்கையோடு நகர்கிறேன்
மேல்சட்டை இல்லாத ஆண்கள்
காற்றுக்காய் வீதியில் வீரியமான
விவாதம் நிகழ்த்திகொண்டிருக்கிறார்கள்!
வரலாற்றில் படிப்பிக்கபட்ட
பழங்காலத்துக்குள் நுழைந்து
விட்டதான சந்தேகம் எனக்குள்!
நான் செல்லநினைத்த இடத்தை
இப்போதடைந்திருந்தேன்!
அது என் வீடுதான் என்பதில்
எனக்கு ஐயமில்லாமல் இல்லை!
அச்சச்சோ
தேவயாணி என்ன ஆனாளோ?
அம்மாவின் குரல் சொல்லிவிட்டது
எங்கள் வீடு தான் என!
தீடிரென வந்த வெளிச்சம்
என்னை இக்காலத்திற்கு
அழைத்து வந்திருந்தது..
வெளிச்சத்தையே இப்போது தான்
பார்ப்பது போல் குழந்தைகள்
கூச்சலிடுகின்றனர்
கோலங்களுக்காய் போடப்படும்
தொலைகாட்சி பெட்டியில்
அவசர செய்திகளாய்
"மின்வெட்டினால் தற்கொலை
செய்துகொள்ளும் நிலை-
புலம்பும் சிறுதொழிற்துறையினர்"
"மற்ற மாநிலங்களிலும்
இப்படி தான் - மத்திய
அமைச்சர் அறிவிப்பு"
அறிவியல் வளர்ந்தாலும்
அரசியலை மாற்றமுடியாது
அடிமனதில் ஓடிகொண்டிருக்கிறது!!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 6:38 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, September 10, 2008
எழுதி ம(மு)டித்த கவிதை!!!!
நீ என்னிடம்
சொல்லிவிட்டு செய்திருக்கலாம்
நானும் உன்னுடனே
அதை செய்திருப்பேன்!
பார்
இப்போது நீ மட்டும்
தனியாக சென்றுவிட்டாய்
நான் தனிமரமாகவே
நின்றிருக்கிறேன்!
எதை செய்வதானாலும்
இதயமே செய்யவா என
கேட்டுகொண்டிருப்பாயே!
இதை மட்டும் ஏன்
நீ கேட்க மறந்தனையோ
இல்லை கேட்காமல்
மறைத்தனையோ!
தந்தையின் சாதீயத்தில்
தாயின் பணத்தாசையில்
போராடி வென்றுவிடுவதாய்
சொல்லியிருக்கிறாய்!
என்னிடம் சொல்லாமலே
இப்போது சென்றிருக்கிறாய்!
நானும் இப்போது உன்னிடமே
வந்து விடுவதாய் முடிவெடுத்துவிட்டேன்!
இந்த கவிதையை எழுதி
முடிக்கும் இந்த கணத்தில்
நானுண்ட நஞ்சும் உன்னிடம்
அனுப்பிகொண்டிருக்கிறது!
வருவேன்! கவிதையை
தொடர்ந்து காவியமொன்றினை
படைத்து விட!!!!!!!!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 5:13 AM 2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
நோக்க நோக்க
பேருந்து பயணம்
நானும் நோக்கினேன்
அவளும் நோக்கினாள்
அவள் அன்னையும்
என்னையே நோக்கினாள்!!
நான் அடுத்த சீட்டிலுள்ள
பெண்ணை நோக்கினேன்!
அவளும் நோக்கினாள்
இவளும் நோக்கினாள்
அவளன்னையும் நோக்கினாள்!
நான் அந்தரத்து கூரையை
நோக்குகிறேன்
யாரும் என்மீது கை
நோக்காமலிருக்க!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:06 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
நான் மீண்டும் காதலிக்கிறேன்..
எனக்கு
எப்போதெல்லாம் தோன்றியிருக்கிறதோ
அப்போதெல்லாம் தோன்றியிருக்கிறேன்!
உனக்கு முன்பாக!!
உனக்கும்
அப்போதெல்லாம் என் நினைவுகள்
வந்து போவதாய் சொல்லிடுவாய்!
~ஆம்~
நாம் அப்போது காதலித்து
கொண்டிருந்தோமென
நினைக்கிறேன்.
வாடிய உன் தலைப்பூவோடு
என் காதலையும் ஒரு அந்தி
மாலையில் உன்னால் வீசியெறியப்பட்ட
போது தான் உணர்ந்தேன்!
ஒரு அர்த்தமற்ற கவிதையை
ஆறு வருடங்களாக எழுதி
கொண்டிருந்தமையை!
எனக்கும் அதில் வருத்தம் தான்!
எனினும்
மீண்டும் காதலிப்பது என
முடிவு செய்திருந்தேன் நான்!
ஆம்
இப்போது நான் மீண்டும்
காதலித்து கொண்டிருக்கிறேன்
வெற்றிலைகுடுவையின் டொக் டொக்
சத்தத்தில் வெறுத்தொதுக்கிய என்
இறந்து போன பாட்டியின் பாசத்தையும்
தலைவலிக்கான மருந்து மட்டுமல்லாமல்
அலைபோலடிக்கும் அன்னையின்
அன்னையின் அன்பினையும்
கால் இடறி கீழிருந்த தருணங்களில்
தோள்பிடித்து தூக்கி நிறுத்திய
தந்தையின் உன்னத உணர்வினையும்
நான் இப்போது
மீண்டும் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்!
இப்போது என்பக்கங்கள்
அர்த்தமுள்ள கவிதையெழுதி
கொண்டிருக்கிறது!
இன்னொன்றும் சொல்லிகொள்வதில்
நான் பெருமைபடுகிறேன்!
நான் இப்போது
காதலிக்கபடுகிறேன்!
விதை முளைக்க ஆரம்பித்தாயிற்று!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:18 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Tuesday, September 9, 2008
எனக்குள் ஒரு தாக்கம் தபூசங்கர்-3
முத்தம்
உன் எல்லாசெயல்களையும்
கண்கொட்டாமல் பார்க்கும் நான்
நீ முத்தமிடும் போது மட்டும்
பதில்கொடுக்க மறப்பதில்லை..
**************************************************
எத்தனை வேண்டுமானாலும்
தருகிறேன் என்கிறாய்!
எத்தனை வேண்டுமானாலும்
தந்துவிடு என்கிறேன் நான்!
உதட்டோடு உதடாய் இருந்தால்
*****************************************************
நீ கேட்கவே வேண்டாம்
நானே தருவேன் என்கிறேன்..
நீ கேட்க வாய்ப்பே இல்லையென
இதழ்கவ்விகொண்டிருக்கிறாய் நீ!
****************************************************
நீ ஒன்று
நான் ஒன்று
என மாறிமாறி கொடுக்கிறோம்
நாம் ஒன்று என்று மாறாமல்
இருக்கிறது முத்தமும் காதலும்
*****************************************************
இந்த முத்தம் மட்டும்
அதிக உஷ்ணமாயும்
அதிக காதலோடும் இருக்கிறது!
தாமதமாய் வந்ததற்கு
தண்டனையாய் அரைமணிநேரமுத்தமா!
இப்படியான முத்தம் தொடருமானால்
இப்படியாகவே தாமதமும் தொடரும்..
***************************************************
சத்தம் போடாமலிருந்தால்
முத்தம் கிடைக்குமென்கிறாய்
முத்தம் கொடுத்தாலே
சத்தம் வராதென்கிறேன் நான்!
உள்நாக்கில் உயிரை செருகும்
உச்சந்தலை மயிர்கூச்செறியும்
முத்தவித்தையை உன்னையன்றி
வேறெவரறிவார் சொல்லடி?
******************************************************
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 7:41 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
எனக்குள் ஒரு தாக்கம்-தபூசங்கர் -2
கன்னங்கள்..
அரைமணிநேரமாய்
பேசிகொண்டிருக்கிறாய்..
வாழ்நாள் விமோட்சனம்
அடைந்துவிட்டதாய் கூச்சலிடுகிறதுசெல்போன் பொத்தான்கள்..
*******************************************************
அழகான கன்னமென
சொல்லி கிள்ளுகிறாய்
பக்கத்துவீட்டு குழந்தையை!
தன்னுடையதை விட
உன்னுடையது அழகென
பொறாமையில் அழுகிறது குழந்தை
*********************************************************
நீ கொடுத்த
சாக்லெட்டுக்காக உன்
கன்னத்தில் முத்தமிடும்
உன் தம்பியின் உதடுகளாய்
பிறக்கவில்லையென
குறைப்பட்டுகொண்டிருக்கிறேன்..
**********************************************************
வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காய்
நீ தடவும் அழகுசாதனங்கள்
உன் கன்ன அழகை ஒருபடி
குறைத்து விடுகிறது
தெரியுமா?
*******************************************************
கற்பனையில் வரையகூட
முடியாத உன் கன்னத்தை
கவித்துவமாய் செதுக்கிவிட்ட
பிரம்மன் மீதெனக்கு
சத்தியமாய் பொறாமை தான்!
**********************************************************
உன் கன்னம் கிள்ளிவிட்ட
எனக்கு தண்டனை தருவதற்காய்
என்னை அழைக்கிறாய்..
இன்னொருமுறை கிள்ளிவிட்டு
மரணமெய்த தயாராகிவிடுகிறது மனது
**********************************************************
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 7:35 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Friday, September 5, 2008
நிர்ணயமில்லா முடிவுகள்-( 100 ஆவது பதிவு)
அந்த முடிவின் ஆரம்பத்தில்
அந்த முடிவை யூகித்திருக்கவில்லை.
இப்படிதான் எல்லாமுடிவின்
ஆரம்பமும் என்று கூட சொல்லலாம்..
ஆனால் எதாவதொருமுடிவினை
எதிர்பார்க்காமல் ஆரம்பித்ததில்லை.
சிலநேரங்களில் சிலகாரணங்களில்
முடிவை நிர்ணயித்துவிடமுடிகிறது..
வேறொரு முடிவையும் அதற்கான
பலகாரணங்களும் வந்துவிடுவதில்
பெரிதான ஆச்சர்யமொன்றுமில்லை தான்!
செயலுக்கான முடிவு நிர்ணயித்தலோ
நிர்ணயமில்லாத முடிவோடு செயலோ
நடக்காமல் இருந்ததே இல்லை...
கவிதை எழுதுதலும் அழித்தலும்
நடந்துகொண்டு தானிருக்கிறது....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:47 AM 7 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, September 3, 2008
நீ தராமலிருந்திருக்கலாம்....
நீ அந்த
முத்தத்தை தராமல்
இருந்திருக்கலாம்!
நான் அந்த
முத்தத்தை பெறாமல்
இருந்திருக்கலாம்!
காதலர்களின் அடையாளங்களை
தேடி சுற்றிய காலங்களில்
கடற்கரையில் முத்தமும்
அடையாளமென அதையும்
நீ தந்துவிட்டாய்!
நான் பெற்றுவிட்டேன்!
நீ இல்லாத
இல்லறத்தில் சுற்றிய
இடங்களிலெல்லாம் உன்
இடத்தினில் இல்லாளை
வலியநுழைக்க முடிகிறது!
நுழைத்து கொண்டு தானிருக்கிறேன்!
உன் இடத்தில் அவளை
நிறுத்திவிடுவதில் அவ்வளவு
சுலபமானதாய் இல்லை,
இருந்தும் முடிகிறது என்னால்!
எனக்கான என் மனைவியின்
முத்தத்தில் மட்டும் அவளை
பார்க்க முடிவதே இல்லை...
நீ
அந்த முத்தத்தை
தராமலிருந்திருக்கலாம்!
நானும்
அந்த முத்தத்தை
பெறாமலிருந்திருக்கலாம்!
நான்
அந்த முத்தத்தோடு
இறந்துமிருக்கலாம்!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:41 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை