என்
வாழ்க்கை
உனக்கான தேடல்!
என்
சொர்க்கம்
உன்னுடனான கூடல்!
என்
நரகம்
உன்னுடனான ஊடல்!
என்
கோடைக்கால குளிர் நீ!
என்
குளிர்கால வெம்மை நீ!
முரணாக
தெரிந்தாலும்
என்
தட்பவெப்பங்களை
நடுநிலையாக்கும் அரண் நீ!
உனை
மட்டுமே சிந்திக்கும்
என் சிந்தை!
எனக்கு
காதல் நடை கற்பித்த
தந்தை நீ!
உன்
கைப்பிடித்தே
மேலோங்கி நடந்தது
என் காதல்!
கெஞ்சலில்
தொடங்கி கொஞ்சிய
முத்தங்கள் தந்து பாடம்
நடத்திய ஆசானும் நீ!
நான்
காதல் தேர்வில்
கரையேறி முதல்மாணவனாய்
முன்னின்றது உன் திறமையால்!
என்
எழுதுகோலின் சிந்தை
உனையே சிந்திக்கும்!
என்
கவிதைகளனைத்தும்
உனையே வர்ணிக்கும்!
அவனன்றி
ஓர் அணுவும் அசையாது!
அவன் தந்த
உனையன்றி
என் அணுக்கள் அசையாது!
என்
வாழ்க்கை
உனக்கான தேடல்!
என்
சொர்க்கம்
உன்னுடனான கூடல்!
என்
நரகம்
உன்னுடனான ஊடல்!
~ஆம்~
என்
வாழ்க்கைக்கும்
வாழ்க்கைக்கு பின்னும்
என் விதியை
தீர்மானிக்கும் கடவுள் நீ!
Wednesday, May 20, 2009
அனுதினமும் அவளோடு-3
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:09 AM 2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Sunday, May 17, 2009
அனுதினமும் அவளோடு -2
உன்
புன்னகை
பூக்களை சேர்த்தெடுத்து
மாலையாக்க நினைக்கிறேன்!
நீயோ
உதட்டை விட்டு
உதிர்ப்பதாய் இல்லை!
ஒரு
மழைவரா விடினும்
என்னால்
வானவில்லை பார்க்க
முடிகிறது!
தலை முதல்
கால் வரை வர்ணங்களை
வாரியிறைத்திருக்கிறான்
உனைபடைத்த
ஓவியன்!
அருவிகளின்
பிறப்பிடம் மலை!
என் கவிகளின்
பிறப்பிடம் பிரம்மனின் கலை!
~ஆம்~
உன்னிலிருந்தே
தொடங்குகிறது என்
எல்லா கவிதைகளும்!
என்
நெஞ்சத்தில்
காதல் நோயை
வளர்த்துவிட்டது
உன்
புன்னகை கிருமி!
அவைகளை
அழிக்க போவதில்லை!
இன்னும்
அதிகமாக்க நான்
என்ன செய்ய வேண்டும்!
என்
தமனி முதற்கொண்டு
சிரை வரை எல்லாமே
சுத்த இரத்தத்தையே
எடுத்து திரிகிறது!
உன்
நினைவுகள் என்
இரத்தம் முழுக்க
கலந்ததால் நான்
பரிசுத்தமாயிருக்கிறேன்!
உன்னால்
வீசியெறியப்பட்ட
பயணசீட்டும்
என்னால் பத்திரமாய்
பாதுகாக்க படுகிறது
என் சான்றிதழ்களை விட!
வேடந்தாங்கலில்
எல்லா குயில்களும்
கழுத்து வரை நீரில் நின்று
சாதகம் கற்றுகொள்கிறதாம்!
உன்
குரலை தோற்கடிக்க!
இப்போதெல்லாம்
நியூட்டனின் புவி ஈர்ப்புவிசை
வேலை செய்யவே இல்லை போல
நான் பறந்துகொண்டே
இருக்கிறேன் உன்
நினைவுகளில்!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:45 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
அனுதினமும் அவளோடு...1
இப்போதெல்லாம்
நான் கர்வத்தோடே
அலைகிறேன்..
உலகின்
குறிப்பிட தகுந்த அழகியை
மிக அருகில் பார்த்தவர்களில்
நானும் ஒருவன் என்பதால்...
ஆம் ~
ஒருதேடல் பயணத்தில்
ஒன்றை தொலைத்துவிட்டு
திரும்பியிருந்தேன் உன்னிடத்தில்!
முன்பெல்லாம்
எதுவாயினும் தொலைந்துபோயின்
என் மனம் பதறும்..
இந்த முறை
பதறுவதற்கு மனமில்லை
தொலைந்ததே அதுவாயிருக்கையில்...
நீ
என் மனம்
திருடினாய்!
உன் நினைவுகள்
என் தூக்கம் திருடின!
இந்த
இழப்புகள் எவையும்
எனக்கு வலிக்கவே இல்லை!
இதமாகவே இருக்கிறது!
உன்
நினைவு உரத்தால்
என் தனிமைப்பூக்கள்
அதிகமாய் பூக்கின்றன!
என்
தனிமைப்பூக்களை
பறிக்கும் உரிமையை
உனக்கே கொடுப்பதாய்
என் செயற்குழு தீர்மானம்
நிறைவேற்றியாயிற்று!
உன் கண்கள்
எந்த வைரத்தால் செய்தது
என சொல்லேன்!
எனக்கு மட்டும்
இரவுகள்வெளிச்சமாக இருக்கிறது
உன் பார்வையால்!
ஒரு வேளை
உனை மீண்டும்பார்க்க நேர்ந்தால்
உன் கண்களை பார்க்கவே
கூடாதென்று தான் வந்தேன்!
மூடாத
உன் விழிகள்இரண்டும்
தேடுவதெது என்பதைபார்த்துக்கொண்டே
இருக்கும்படிஆகி விட்டதே!
சரி !
இனி நீயே கண்களை மூடிக்கொள்
என்னால் பார்க்கவும் முடியவில்லை
பார்க்காமல்இருக்கவும் முடியவில்லை!
ஒரு குழந்தையிடம்
ஒரேயொருமுத்தம் கேட்டு
கெஞ்சிக்கொண்டிருந்தாய்!
கொஞ்சப்படவேண்டிய
சித்திரம் கெஞ்சிக்கொண்டிருப்பதில்
ஆதங்கம் எனக்கு!
நான் மட்டும்
அந்த குழந்தையாய் இருந்திருந்தால்
உன் கன்னத்திலிருந்து
என் உதட்டை எடுத்திருக்கவேமாட்டேன்!
என்
சீதல உடம்பு இப்போதெல்லாம்
வியர்ப்பதில்லை!
உன் மீதானகாதலால்
உறைந்து போயிருக்கிறது!
உன்
பெயர்கேட்க நினைக்கையில்
நான் உயர்இரத்த அழுத்தத்திற்கு ஆளாகிறேன்!
உன்
அருகில்வர நினைத்தாலோ
அணுக்கள் பிளவுபட்டு
நிலைகுலைந்து போகிறேன்!
(தொடரும்.......
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:36 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Friday, March 20, 2009
பாற்கடல் எறும்பு நான்!!!
உனை பார்த்துகொண்டே இருப்பதும்
உன்னிடம் பேசதுடிப்பதும்
பேசாமலே போய்விடுவதும்
எனக்கு வாடிக்கையாகிவிட்டது!
உனை சந்திக்கும் தருணங்களில்
எனை ஆட்கொள்ளும் இன்பதுன்பங்களை
புலம்பிதீர்த்தவாறே முடிந்துவிடுகிறது
என் பேனாவின் தூக்கமற்ற இரவுகள்!
உனக்கு மனவருத்தமில்லாமலும்
எனக்கு மனவருத்தம் நீங்குமபடியாயும்
என் காதலை உன்னிடம் சொல்லிவிட
வழிவகை தேடியே என் நினைவுகள்!
எங்கு
எப்படி
எதனை
பயன்படுத்தி உன்னிடம் சொல்வதெனது
காதலை!
பாற்கடலில் மூழ்கிவிட்ட எறும்பினைபோல்
திக்குமுக்காடி கிடக்கிறேன்!
கரையேறவா ? இல்லை உன்னிலே
கரைந்துவிடவா என?
மதுவை விட உன் நினைவுகள்
எனை நிலைகுலைய செய்வதால் தானோ
மாது நீ!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:23 AM 3 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Tuesday, March 17, 2009
மர்மநாவல்
மெல்ல மெல்ல நகரும்
நாவலின் கடைசி பக்கத்தின்
அதிர்ச்சி மர்மத்தையே
நீயும் கொண்டிருந்தாய்!
ஆறாண்டு காலங்கள்
புரட்டிய காதல்பக்கங்கள்
கடைசியில் கண்ணீரில்
நனைந்து அழிந்து போகையில்
நீயும் ஒரு
மர்ம நாவலாகவே
தெரிந்தாய் எனக்கு!
படித்துமுடித்த நாவலின்
சம்பவங்கள் ஆட்கொள்ளும்
நிகழ்வுகள் என்னமோ
சிலகாலம் மட்டுமே!
நீ
நீங்காத வலிதந்த
நீளமான நாவலாகவே
நீள்கிறாய் என் வருடங்களில்!
உனை மறக்கும் யுக்திகளில்
தோற்று தோற்று இப்போது
இறக்கும் யுக்திகளை மேற்கொள்கிறேன்!
அவைகளும்தோற்றுபோகிறது
உன் நினைவுகளால்
வரலாறு எழுதாத நிகழ்வுகளாய்
என் வலிகள் கவிதைகளாய்!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 5:08 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Saturday, March 14, 2009
நரம்பறுந்த வீணை
நீ முழுவதுமாய்
எனை ஆட்கொண்டிருந்த
தருணங்களில் வேறெதுவும்
சிந்திக்காத என் சிந்தை
ஆயிரம் சிற்பிகளின் கைகள் பெற்றதாய்
நினைத்துகொண்டு செதுக்கிய
உன் பார்வைக்காய் தவங்கிடந்த
என் கவிதைகள்
உன்னால் ரசிக்கப்பட்ட தருணங்களை
நினைத்து அங்கலாய்த்து
சிறகடித்துகொண்டிருக்கும் என் அறைமுழுக்க!
பிரிதொரு நாளிலுன்
பிரியத்தினின்று வெளித்தள்ளப்பட்ட
என் கவிதைகள் அனைத்தும்
என் இருகைகளாலே கிழிக்கப்பட்ட
கணங்களில் அழுதுதுடித்த
காகிதத்தின் வலியின்
பலமடங்கினை கிழிப்பதற்காய்
அடைந்தேன் நான்!
அழகாய் வடிவமைத்து மீட்ட
மீட்ட இன்பம் தந்து நரம்பறுந்து
பரணேறிய வீணையின்
நினைவுகளாய்
அறைமுழுக்க
பரவிகிடக்கும் இந்த கவிதைகள்
அனைத்தும் உன்மீதான
என் அளவில்லாத பிரியங்கள்!
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:32 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Saturday, March 7, 2009
ஒரு நாயகன் உதயமாகிறான்!!!!

ஹா ஹா ஹா ஹா சும்மா டெர்ரர் மாதிரியே இல்ல..(இல்லதான்னு சொல்லகூடாது).படிக்காதவன் படம் பாத்துட்டு இருந்தப்ப ஒரு சீன்ல தனுஷை இந்தமாதிரி போஸ்ல ஒரு ஸ்டில் எடுப்பாங்க..அதை பார்த்த தேனுவும் ஹை தணி தணி நீ தான்னு கத்த ஆரமபிச்சுடுச்சு..அப்ப நாமளும் இந்தமாதிரி ஒரு ஸ்டில் எடுக்கோணும்னு ஒரு ஆசை..அது இப்போதான் நிறைவேறிச்சு...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:01 AM 5 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை சுயவிளம்பரம்


