CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, September 19, 2007

என் தோழி.

குறிக்கோளுடன் பயணித்தவன்

குரங்குமனக் காதலியால்

கிறங்கடிக்கப் பட்ட போது

மரணத்தின் வாசல் சென்றவனை

கரம் பிடித்து

காரணம் கேட்டவள் என்னிடம்

நிவாரணமாய் பேசினவள்-நீ

சந்திக்க உறவுகள் உண்டு

சிந்திக்க உரிமைகள் உண்டு என என்

சிந்தனைக்கு உணர்த்தியவள்..

ஆரோக்கியம் பேணுபவள்

அன்னை என்றால்

அவளும் என் அன்னை.


அறிவுரை தருபவர்

அப்பா என்றால்

அவள் தான் என் அப்பா

அறிவு புகட்டுவார்

ஆசானென்றால்

அவள் என் ஆசான்

காப்பது தெய்வமென்றால்

அவளன்றோ தெய்வம்.

தோழியால் மட்டுமே

அனைத்துமாய்

தோன்ற முடியும்....

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: