CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, September 12, 2007

சமூக நிலை

சாதாரண விசயங்கள் தான்

சகலத்தையும் ஆட்டி படைக்கும்

சக்தியாய் மாறிவிட்டது..

சர்வேஸ்வரன்

சக்தியற்று போய்விட்டான்

சடையப்பன் தானே

சர்வமும் படைக்கும்

சக்தியை பெற்றுவிட்டான்

சாதீயமும்

சடங்குகளும்

சரிபாதி இங்கிருக்க

சதிசெய்யும் மானிடரோ

சங்கூத காத்திருக்க

சகதி நிறைந்த

சமூகம் வேறன்றி

சமத்துவம் தான் எங்கு வரும்

சந்தனம் தான் எங்கு வீசும்

சாதனை தான் எங்கு பிறக்கும்

சரித்திரம் தான் எப்படி படைக்கும்

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: