சிவா தாங்க என்னோட ஒரே பிரண்டு..ரெண்டுபேரும் தான் எப்பவுமே கில்லியாட போறதிலிருந்து பள்ளிகூடத்துக்கு போறவரைக்கும் எப்பவுமே ஒன்னா தான் போவோம்..இன்னிக்கு நான் பள்ளிக்கு கெளம்பி சிவாவை போய் பார்த்தா இன்னும் கிளம்பாம அழுதுட்டு இருந்தான்..
இன்னாடா சிவா அழுதுகினு இருக்கன்னு கேட்டா எங்க அப்பா அடிச்சிட்டாருடான்னு ஹிரும்பவும் தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான்..உள்ள பாத்தா சித்திரை அண்ணன் அதான் சிவாவோட அப்பா அவுங்கம்மாவவயும் போட்டு அடிச்சிகிட்டு இருந்தாரு..
பாவி மனுஷா காலங்காத்தால குடிச்சிட்டு வந்து இன்னும் இப்படி போட்டு அடிக்கிறியே ..அந்த பள்ளிகொடத்துக்கு போற புள்ள இன்னாயா பாவம் பண்ணுச்சு..என் வயித்துல வந்து பொறந்ததுட்டு இப்படி எங்கூட அதுவும் இப்படி சாவுதேன்னு அழுதுட்டு இருந்துச்சு..
பஞ்சாயத்துபண்றதுக்குன்னே பக்கத்துல இருந்த பெருசுங்க ஏண்டா இந்த மாதிரி பண்ணிட்டிருக்கன்னு கேட்க எதுவுமே காதுல வுழாதமாதிரி சித்திர அண்ணன் டேய் போங்கடா என் பொண்டாட்டி இன்னா வசியம் காட்டி வரவெச்சாளா தேவிடியான்னு திரும்ப போய் எட்டி உதைச்சாரு அந்தண்ணிய..
இவன்லாம் என்ன சொன்னாலும் திருந்தமாட்டான்யான்னு வந்த பெருசுங்க திரும்ப போயிடுச்சு..தெருவில இருக்க பொம்பளைங்கல்லாம் வேடிக்க பாத்தகதியா நின்னுட்டு இருந்ததுங்க.டேய் சிவா அழுவாதடா ன்னு அவன் கண்ணை தொடச்சிவிட்டு மூஞ்ச கழுவிட்டு வாடான்னு தண்ணிமொண்டு கொடுத்து பையை எடுத்துகிட்டு கூட்டிட்டு போனேன்..
பள்ளிகுடமுடிச்சு வரவரைக்கும் சிவா அழுதுட்டே தான் இருந்தான்..பாதிவழியில கல்லுமோட்டு பக்கமா சித்தரண்ண லுங்கி இல்லாம வெரும் டவுசரோட மண்ணுல கிடந்தாரு..தூக்கமுயற்சி பண்ணி பாத்தோம் ரெண்டுபேரும் முடியலை..அதுக்கப்புறம் வுட்டு தள்ளுடா இந்தாளு வூட்டுக்கு வராம இருந்தாலே நிம்மதிடா எங்களுக்குன்னு முன்னாடி போயிட்டிருந்தான்..
இன்னாடான்னு கேக்க வூட்ல சோறு பொங்கி ரெண்டுநாளாச்சுடா..நாய்க்கர் வீட்டாண்ட ஊத்துன பழைய கஞ்சிய மிச்சம் வெச்சுதாண்டா நேத்துவரைக்கும் குடிச்சோம்..இந்தாளுக்கு மட்டும் எப்படிதான் குடிக்கறதுக்கு காசு வருதுன்னே தெரியலைன்னு புலம்பனான்..
டேய் யாருடா அங்க வாங்கடா இந்த வெறகு கட்ட தூக்கி தலையில வைங்கடான்னு நாராயனந்தாத்தா கண்ணசுருக்கிகின்னே கூப்புட்டாரு..சரின்னு போய் எங்க தாத்தா போற வூட்டுக்கா நானே தூக்கிட்டு வரேன்னு சிவா தூக்கிகிட்டான்..டேய் வூட்டுக்கில்ல இப்பை கல்லுமோட்டு பக்கமா வான்னு வேலிக்காத்தா பொதருக்காகூட்டிட்டு போனாரு ..
பின்னாடியே போய் பாத்தா பாக்கெட்டுல அங்கதான் சாராயம் வித்துகினு இருந்தானுவ.இன்னா தாத்தா இங்க கூட்டியாந்துகீறன்னு நான் கோவமா கேட்டா மடைபயமவனே காசுக்கு நான் எங்கடா போவேன் அதான் வெறகு வெட்டியாந்து குடுத்தா மூனு பாக்கெட் குடுப்பானுவன்னு அதுபக்க ஞாயத்தை அது சொல்லுச்சு..
தலையிலிருந்த வெறக தொப்புன்னு போட்டுட்டு போயாகிழவான்னு வேகமா சிவா நடக்க பின்னாடியே நானும் போனேன்,,டேய் எங்கப்பனும் இப்படி தான் குடிக்கிறான்போலன்னு ஏதோ யோசிச்சுகிட்டு வீட்டுக்கு போனான்.மறுநா காலையிலெழுந்து டேய் வாடான்னு என்னையும் கூட்டிகிட்டு காட்டுபக்கமா போனாக்கா வெறக வெட்டிவெச்சிட்டு வேலி ஓரமா திரும்பி ஒன்னுக்கு போயிட்டிருந்தாரு சித்தரண்ன,,
என்னடா பண்ண போறன்னு கேட்க வெறகதூக்கிகினு இன்னைக்கு எப்படி குடிக்கிறபாருய்யான்னு ஓட ஆரம்பிச்சுட்டான்..அவரு கண்ணுக்கு அப்பால ஓடி வந்தா நாராயணந்தாத்தா எதிர வந்துச்சு ..தாத்தா வெறகு ஓனுமின்னா எடுத்துக்கோன்னு அவருகிட்ட குடுத்துட்டு வீட்டாண்ட வந்தோம்..பாத்தா அங்க கையில கொம்போட அவுங்கப்பா கோவமா நின்னுட்டு இருந்தாரு..
திரும்ப எந்தபக்கமா ஓடுரதுன்னு தெரியாம பயத்துல ஓட ஆரம்பிச்சோம்..பின்னாடியே தொரத்திட்டு ஓடியாந்தாரு அவரும்..டேய் கல்லுமோட்டு பக்கமா பொதார்ல ஓடிரலாம் வாடான்னு இழுத்துட்டு ஓடுனேன்..
பாத்தா அங்க சாராயம் விக்குற இடத்துல சனமெல்லாம் கூடி எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டு இருக்குங்க..உள்ள நுழைஞ்சு பாத்தா நாராயணந்தாத்தால இருந்து பதினஞ்சு பேருக்கு வாயில நுரைதள்ளிட்டு கிடந்தாங்க..
பொம்பளைங்கெல்லாம் ஓன்னு அழுதுட்டே இருந்ததுங்க..என்னன்னு புரியாம திரும்பி பாத்தா பின்னாடி அவுங்கப்பா .பயத்தில நடுங்க அவரோ கொம்ப போட்டுட்டு திரும்ப போயிட்டிருந்தாரு..
Friday, June 27, 2008
பாக்கெட் சாராயம்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 5:16 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை சிறுகதை
டைமிங் கிராஸ்
என்னடா வாழ்க்கை இது? எப்பபாத்தாலும் வேலைக்கு போ வேலைக்கு போன்னு உயிரெடுக்கிறாரு அப்பா..வேலை கொடுத்தா நான் என்ன போக மாட்டேன்னா சொன்னேன்..நல்லா தான் படிச்சேன்..பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி பைலை தூக்கிட்டு அலைஞ்சா போன மூனு கம்பெனிக்கே வாழ்க்கை வெறுத்துட்டு
படிச்சப்ப வாங்கி கொடுத்த சைக்கிளெடுத்துகிட்டு சைட்டடிக்க பஸ்ஸ்டாண்டு பக்கமா மணி நாலாச்சுன்னா
போயிடறது தாங்க நம்ம வாழ்க்கை..
என்னடா புலம்பிட்டே போறான்னே யாரு இவன் பேரு என்னன்னு யோசிக்கறீங்களா? பேரு சிவாவே தான். மூனு வருசமா வேலை தேடுற வேலைய விட்டுட்டு இங்க பஸ்ஸ்டாண்டுல தான் ஆட்டோ காரனுங்களை பிரண்டா பிடிச்சுகிட்டு போற வர குஜிலிங்களையெல்லாம் லேசா கலாய்ச்சுகிட்டு இருந்தாலும் இது வரைக்கும் ஒன்னுமே மடியல..சரி இன்னைக்கு கொஞ்சம் மெருகேத்திகிட்டு போலாம்னு யோசனை..
மணி மூனாச்சு..எழுந்து பாத்ரூம் போனவன் அரைமணிநேரம் குளிச்சுட்டு வெளிய வந்தா இவரு பாக்கற வேலைக்கு இது ஒன்னும் குறைச்சலில்லன்னு அம்மா கத்திட்டே இருந்துச்சு..அடிக்கிற காத்தோட காத்தா அம்மாவோட பேச்சையும் துரத்திவிட்டு மேக்கப் போட ஆரம்பிச்சு 3.50 ஆயிடுச்சு..இப்பவே கிளம்பினாதான் பஸ்ஸ்டாண்டுக்கு போகமுடியும்னு சைக்கிள் எடுத்துட்டு கிளம்பி போயிட்டேன்.
இந்த ஆட்டோகாரனுங்க கூட உக்காந்தா தான் ஒரு சப்பை பிகரு நம்மளை பாக்கலை சைக்கிள்லேயே இருந்து சைட் அடிப்போம்னு தள்ளியே நின்னுட்டேன்..ப்பா புதுசா ஒரு பொண்ணு ..இன்னைக்கு தான் பாக்குறேன்.இவ்ளோ அழகா நம்ம ஏரியாவிலயா..எப்படீயாச்சும் பிட்ட போட்டுடனும்டா ன்னு என் மனசு சைக்கிளை உந்த ஹாய் பிரியான்னு ஒருத்தன் நல்லா அழகா பைக்கை கொண்டாந்து நிப்பாட்டி ஏத்திட்டு போயிட்டான்..
இப்ப தான் எனக்கு புரிஞ்சது காலத்தோட வேகம்..அதே வேகத்தோட வீட்டுக்கு போய் தூக்கி போட்ட சர்டிபிகேட் பைலை தேடதொடங்கினேன்..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 5:15 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை சிறுகதை
Wednesday, June 25, 2008
கல்லெறியபட்ட மகிழ்ச்சி
அலுவல்களின் அழுத்தங்களில்
மீண்டெழுந்து அமைதிக்காய்
வீட்டுதோட்டத்தின் வெறித்தலில்.
நிழலினை குரைத்து
விளையாடி கொண்டிருக்கும்
நாய் குட்டியினை சமாதானம்
செய்வதாய் தூக்கி செல்லும்
மகளினிருந்து கொஞ்சநேர
மகிழ்ச்சியிலும் கல்லெறிந்ததாய்
வெளியேற எத்தனிக்கும்
குட்டியின் மனதினோடே
எழுந்துபோகிறேன்
மனைவியின் அவசரகுரலுக்கு...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 5:04 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
காமம் தலைதூக்கும் கணத்தில்.....
அடுத்தவளையெல்லாம்
அம்புதொடுக்கும் என்
காம கனைகளுக்கு
அவ்வப்போது குறுக்கிடும்
அறிவுரைகள் தவறென
சொல்லி செல்லும்..
~இருப்பினும் ~
கம்பத்தினை கண்ட நாயாய்
காலைதூக்கும் என் காமத்தில்
கல்லெறிந்து போகும்
காமுகனொருவனின் என்
மனைவியின் மீதான வெறித்தல்..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:49 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Saturday, June 21, 2008
உண்மைகாதல்-மீள்பார்வை
உண்மைகாதலொன்றுக்கு
உதாரணம் கேட்டார்கள்.
உன்னுடனான என்காதலையே
மீள்பதிவாக்குகிறேன்..
அடிகள்ளி!!!
முதன்முதலாய்
எப்படியடி என்னுள்
நுழைந்தாய் நீ!
எதிர்பாராத தருணமொன்றில்
எனக்கானவளாய்
என்னெதிரே நின்ற
முதல்கணத்திலே
முடிவாக்கினேனே!
வாழ்ந்தால் அது
வஞ்சி உன்னுடன்
தானென்று!!
அன்றிரவு முதல்
இமைகளிலெல்லாம்
இனிமைகனவுகளாய்
இனியவள் நீ மட்டும் தான்!
கனவுகாண்!முயற்சிசெய்
கலாமின் வார்ப்புகள்
காதலில் பிரயோகிக்கிறேன்!
முயற்சியின் பால்
முடிவும் கிடைத்தது.
நீ என் காதலியென்று!!
கனவில் கைகோர்த்த
கடற்கரைகள் இன்றுநம்
கால்தடங்களை பதிக்கிறது..
எந்தலை வலிக்காக நீயும்
உன் காய்ச்சலுக்காக நானும்
வலிகண்ட அழுகைகளும்
தோல்விகளுக்கான
தேற்றுதல்களும்
வெற்றிகளுகளுக்கான
வாழ்த்துகளும்
பறிமாறலாய்
அரங்கேறிய கணங்கள்
என் வாழ்வின்
விமோட்சனங்களென்று
இருவரும் சொல்லிகொண்டோமே!!
அப்பப்பா!!
எத்துணை அழகான
நினைவுகள் அத்தனையும்
நினைத்து நினைத்து
சிரித்திருப்போமே!!
நான் எதையாவது
சொல்ல சின்னகுழந்தையாய்
சினுங்கிகொண்டு
பேசமாட்டேனென
சொல்லிவிட்டு
அடுத்த ஐந்துநிமிடங்கள்
நமக்குள் அழைப்புகள்
அரங்கேறுமே
அப்படிதானடி
இந்தமுறையும் செய்வாய்
என இருந்தேன்.
ஆறுமாதம் கழித்த உன்
அழைப்பில் வலியோடே
நான் கண்ட சுகத்தை
அப்போதே
அடித்துநொறுக்கினாயே உன்
திருமணசேதி சொல்லி
பிரேதமாகவே பேசிமுடித்தேன்
நாளை நாம்
வழக்கமாக சந்திக்கும் இடத்திலே
சந்திப்போம் என!!
செக்கசெவேலென நிறம்
சென்னைக்கு பக்கத்தில்
ஆறு ஏக்கர் நிலம்
நிச்சயத்துக்கே இருபதாயிரம்
ரூபாயில் பட்டுபுடவை என
நான் நகர்ந்துவிட்டாதாகஎண்ணி
உன்தோழியிடம்நீ பிதற்றிய
பெருமைகள்சொல்லிசென்றது..
வரவழைத்த கண்ணீரோடு
வற்புறுத்தினார்கள்
மறுக்கமுடியா சூழ்நிலை என
மனங்கூசாமல் நீ சொன்ன பொய்களை!!!
இப்போதாவது சொல்வாயா
உன்னுடனான என் காதலும்
பணம்மீதான உன் காதலும்
உண்மைதானென்று..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 5:11 AM 2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Saturday, June 14, 2008
ஒரு சுயத்தின் உளறல்..
என் பேரு சிவா.வயசு 25 ஆகுது.நல்ல கம்பெனில வேலை செய்றேன்..போன வருசம் தான் கல்யாணமும் ஆச்சு.அழகான பொண்டாட்டி..எனக்குன்னு பாத்து பாத்து செய்வா..இந்த ஒரு வருசத்தில சின்னதா எப்பவாச்சும் கசப்பு வந்தா கூட அவளோட சிரிப்பும் விட்டுகுடுக்கும் தன்மையும் என்னை அதை மறக்கவெச்சுடும்..நல்லாவே இருந்தோம் ஒரு வருசம் வரைக்கும்..படுக்கையறையிலிருந்து எல்லாத்திலயும் அவளுக்கு பிடிச்ச மாதிரி நானும் எனக்கு பிடிச்ச மாதிரி அவளும் இருந்தோம்..
ஒன்பதாவது மாசம் சீமந்தம் முடிச்சு புள்ள பெத்துட்டு வரேன்னு அம்மா வீட்டுக்கு போயிட்டா..பொண்டாட்டி இல்லாம ரெண்டு நாள் ஏதோ போச்சு..மூனாவது நாளென்னோட தனிமை என்னை என்னமோ புரட்டி போட்டுச்சு..அவ ஞாபகமாவே இருந்துச்சு..லீவ் போட்டுட்டு அவளை பாக்க போயிட்டேன்..ரெண்டு நாள் அங்கிருந்தா ஆபிஸிலிருந்து போன் பண்ணி சீக்கிரம் வாங்கன்னு குரல்..வேலையை பாருங்கன்னு அவளும் துரத்திட்டா..
ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா அம்மாக்காரி எப்பவும் கஸ்தூரியில ஆரம்பிச்சு லட்சுமி வரைக்கும் அழுதுட்டு இருக்கா..சாப்பாடு கூட நேரத்து போட மாட்டா..உம்முன்னு மூஞ்சை வெச்சுகிட்டு போய் படுக்கையில இழுத்து போத்திகிட்டு படுத்தா பக்கத்தில படுத்திருந்த பொண்டாட்டி காரி தான் ஞாபகத்து வர்ரா...அதோடு அந்த லீலைகளும்..உடம்பு நெருப்பா கொதிக்க ஆரம்பிச்சுது..மண்டை காஞ்சு போய் ராத்திரிக்கெல்லாம் தூக்கம்வரமா காலையில எந்திரிச்சு கழுவின மூஞ்சும் சூம்பிபோன கண்ணுமா ஆபீஸ் போனாக்கா பக்கத்து சீட்டு பழனி என்ன மச்சி பொண்டாட்டி இல்லாம வாடிட்ட போலன்னு வெறுப்பேத்தினான்..
அடபோடா நீவேறன்னு சொல்லிட்டு திரும்பினா டேய் 150 ரூவாய் தான் ..காலேஜ் போற பொன்னு ஒன்னு இருக்கு..ஓகேன்னா சொல்லு சாயங்காலம் நேரா போயிடலாம்..எட்டு மணிக்கெல்லாம் அவளை திருப்பி அனுப்பிடலாம்..
போடா இவன...நான் எம்பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு வேலை முடிச்சு வீட்டுக்கு வந்து திரும்பவும் அம்மா காரியோட பாவக்கண்ணீர பாத்துபுட்டு ரூம்ல அடைஞ்சா மனசு பழனி சொன்ன காலேஜ் பொன்னுக்கா திரும்பிச்சு..நாளைக்கு போலாமா வேணாவான்னு மாறி மாறி போட்டி போட்டு சுத்துது..எப்படியோ போலாம்னு முடிவு பண்ணி தூங்கிட்டேன்.காலையில எழுந்து ஆபிஸ்க்கு கிளம்பி போய் பழனிக்கிட்ட கேக்கலாம்னு நினைச்சு நினைச்சே ஏதோ ஒன்னு தடுக்குது..கடைசி வரைக்கும் கேக்க மனசே இல்ல..வீட்டுக்கு வந்து ரூமுக்குள்ள போவாம மேயக்காட்டு பக்கமா காத்தாட உக்காரலாம்னு
அப்படியே போனேன்..
அப்ப தான் இந்த பிரியா பொன்னு அந்த பக்கமா வந்துச்சு..பாவம் கல்யாணம் ஆகி ஆறுமாசத்தில் புருசங்காரன் ஆக்ஸிடெண்ட்ல செத்துட்டான்..திரும்ப அம்மாவூட்டுக்கே வந்துட்டா..எப்பவும் அண்ணான்னு தான் கூப்பிடுவா..என்னங்கண்ணா தனியா உக்காந்துட்டு இருக்கீங்கன்னு கேட்டுபுட்டா..எங்கிருந்து வந்தது தைரியம்னு தெரியலை..எங்க பொண்டாட்டி இல்லை..தனியா கட்டில்ல படுக்க கூட முடியலைம்மான்னு பட்டுன்னு சொல்லிட்டேன்..அந்த பொன்னு சுதாரிச்சுகிட்டு சரி நான் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போக முயற்சி பண்ண பட்டுன்னு அவளை கட்டி புடிச்சுகிட்டு பிச்சை காரன் மாதிரி கெஞ்சிட்டு இருந்தேன்,,
எதோதோ பண்ண கடைசியில அந்த புள்ளயும் மடியில சாய்ஞ்சுடுச்சு..எங்க பழக்கம் அடுத்தநாளும் வந்துச்சு..இப்படியே பொண்டாட்டிய மறந்துட்டு அந்த புள்ளை மிரட்டி மிரட்டி என்கைகுள்ள போட்டுகிட்டு என் ஆசையெல்லாம் தீத்துகிட்டு என் இஸ்டத்துக்கு இருந்தேன்.இதை ஒரு நா மேயக்காட்டு பக்கமா வந்த ஆத்தா காரி பாத்து தொலைச்சுட்டா..
புள்ள பெத்தலட்சணம் போதும்னு ஊருக்கு போய் பொண்டாட்டிகாரிய இழுத்துட்டு வந்துட்டா..ஒரு மாசகுழந்தையோட பொண்டாட்டியும் வந்து சேர்ந்தா.புள்ள தறிட்கெட்டு திரியறான்னு எப்படி என் ஆத்தாகாரி என் பொண்டாட்டிகிட்ட சொல்லுவா..
அடியே அந்த பிரியா பொன்னு ஊர்ல இருக்கறவனையெல்லாம் வெச்சுகிட்டு திரியறா..வெக்கங்கட்ட சிரிக்கி..அவளுக்கு நல்லசாவே வராது..உம் புருசனையாச்சும் பத்திரமா பாத்துக்கோடி ன்னு சூசகமா சொல்லிட்டா...
என் பொண்டாட்டியும் அதையே மனசுல வச்சுகிட்டு ஏங்க சத்தியமா என்னை தவிர நீங்க யாருகிட்டயும் போகமாட்டீங்களேன்னு அழுதா..எதுவுமே தெரியாத மாதிரி ஏம்மா திடீர்னு இந்த மாதிரி கேக்குறன்னு நான் கேக்க பிரியா சண்டாளி ஊர் மேயறாளேமேன்னு அவளை திட்டுறா..
சத்தியாமா உன்னை தவிர ஒருத்தியவும் தொடமாட்டேன்..அவ அப்படி திரிஞ்சா உம்புருசனை நீ நம்பமாட்டியான்னு பொறந்த குழந்தை மேல சத்தியம் பண்ணிட்டு மனசாட்சியே இல்லாம படுத்துட்டேன்..
இப்பவும் என் பாழாபோன மனசு பிரியாவை தான் கேக்குது...சே என்னால தான் அந்த பொன்னுக்கு இப்படி ஒரு பட்டம்ன்னு நொந்துகிட்டாலும் இனிமே எப்படி பிரியாவை பாக்குறதுன்னு மனசுக்குள்ள திட்டம் ஓடிட்டிருக்கு...
நீங்க சொல்லுங்க நான் நல்லவனா ? கெட்டவனா?
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:34 PM 4 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை சிறுகதை