CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, December 19, 2007

கனவே கலையாதே-2

சலவைசெய்த வெள்ளைதுணி
அளவான கால்சட்டை
அணிந்தே பள்ளிக்கு சென்றேன்
காலை ஆரம்பம் நண்பர்களுடனே
விளையாடி மகிழ்ந்தே மணி
அடித்த கணம் வரிசையில் நின்றே
கடவுள் வாழ்த்தோடு தேசிய கீதமும்
பாடிமுடித்தே வகுப்பறைக்குள்
ஆசிரியரின் பாடம் கற்றே
பள்ளி முதல் மாணவனாய்
பரிசு பெற மேடைக்கு சென்ற
நேரம்...

எட்டி உதைத்ததே
எஜமானனின் காலுமே
வேலை நேரத்தில் என்னடா
தூக்கம் என்று..
நிலைமைக்கு வந்தே கனவையும்
வேண்டினேன்
உன்னிலாவது நான் மாணவனாய்
இருந்துவிடுகிறேன்..
கனவே கலையாதே.

இக்கவி குழந்தைதொழிலாளருக்கு சமர்ப்பணம்

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: