CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, December 19, 2007

சுடும் நிலவு

இரத்தம் அதை பாலாக்கி
பசியில் எனக்கு
ஊட்டிவளர்த்த அன்னை..

நடைபழக என் விரல்பிடித்து
அழகாய் ரசித்தே
ஓட்டபந்தயத்தில்வெற்றி பெற்று
முதல்பரிசோடு வந்ததுவரை
அன்பாக தலை கோதி
அணைத்த அப்பா...

ஊர்சுற்றி திரிந்து
தாமதமாய் வந்தாலும்
ஓடிவந்து உபசரிக்கும்
செல்ல அக்கா...

இன்பமான சுகங்களும்
சோகமான வலிகளும்
என்னுள்ளே இருந்தாலும்
நான் சிரிக்கும் போது சிரித்தும்
எனக்காய் அழுதும்
எப்போதும் எனக்காய்
சிந்தித்த நண்பன்...

பார்த்த நாளிலிருந்து
பறவையாய் என் மனமெங்கும்
இன்பமாய் இருக்க‌
என்னுள்ளே எனக்காய்
வாழ்ந்த காதலி....

இத்த‌னை உற‌வுக‌ள் என‌க்காய்
இருந்த‌ போதிலும்ப‌ண‌ம்தேடி
அய‌ல்நாடு வ‌ந்த‌ போது
ப‌ண‌ம் த‌விர‌ பாச‌மும்கிட்டாத‌
பொழுதும்உட‌ல் ந‌ல‌மின்றி
கிட‌க்கும்பொழுதும்
உங்க‌ள் நினைவாலே
வாடி த‌விக்கும் நெஞ்ச‌த்தோடு
த‌னிமைக்காய் அம‌ர்ந்திருந்தேன்
நில‌வை பார்த்த‌வ‌ண்ண‌ம்...
நில‌வும் சுடுதே
என்நெஞ்ச‌மும் வாடுதே.........

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: