CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 18, 2007

நிலவில்லாத வானம்

அன்பாய் கைகோர்த்து நடந்த
அந்தி மாலைப்பொழுது
அவசரமாய் பணிமுடித்து
உனக்காய் காத்திருந்த
பேருந்து நிறுத்தம்

முதல்முறையாய் உன்னுடன்
சென்று வந்த மெரினாகடற்கரை
என் உடல் நனைத்து மனம் தொடும்
அதிசய அலைகள்

சின்னக்குழந்தையாய் நீ
விரும்பி தின்ற ஐஸ்கிரீம்
இயற்கையின் அழுகையாய்
வியக்கவைக்கும் மழையில்
நாமிருவரும் நனைந்தே சென்றது..

குலுங்கி குலுங்கி செல்லும்
பேருந்தின் கடைசி
ஜன்னலோர இருக்கையில் உன்னை
மடியில் கிடத்தி நான்..

பிறந்தநாள் பரிசாய் நீ
எனக்களித்த ஜோடிபுறா.
முதலாய் நான்வாங்கி தந்த
மணம்வீசும் மல்லிகை..

இவையெல்லாம்
இன்றும் நான் கடந்துகொண்டு
தான் இருக்கிறேன்..
நீ இல்லாமல் நினைவுகளை
மட்டும் சுமந்துகொண்டு
நிலவில்லாத வானமாய்.......

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: