CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, December 19, 2007

கனவே கலையாதே.

பள்ளிபருவமது முடிந்தே
கல்லூரிக்குள் காலடிவைத்த முதல்நாளே
கால்முளைத்த சிற்பமாய்
கரம்கொடுத்து பெயர்சொன்னாய்...

நட்பாய் ஆரம்பித்த பழக்கம்
புரிதலின் காரணமாய்
பேசிமுடித்தோம் நாம்
காதலர்களாய் இருப்போமென..

கல்லூரிமுடிந்தே கனவோடு
வெளியே வந்தோம்.
காலமும் வழிவிட்டது..
அதிக சம்பளம் அழகான வீடு
வசதி வாய்ப்புகள் எல்லாமே.
வந்தது .நீயுமே கரம்பிடித்தாய்
மனவியாய்..

இல்லறவாழ்க்கையில் அன்றுமுதல்
நல்லறவாழ்க்கையே வாழ்ந்தோம்
ஆசைகொன்னும் ஆஸ்திக்கொன்றுமாய்
உன்னைபோலவே செதுக்காத சிற்பங்களாய்
இரு குழந்தைகளும் நமக்கு..
இதுநாள்வரை ஒரு சின்ன ஊடலும்
இல்லாமல் சளிப்பில்லாத வாழ்க்கை.

புரிதலின் காரணமாய் நமக்குள் இருந்த
பகிர்தலும் பாசத்தோடு காதலும்
கலந்தே காலமும் கடந்ததே..
கட்டிலில் அருகில் படுத்திருந்த நீ
காலமும் வருமோ காதலோடே
இறப்பேனே என்று கவிதை சொல்லி
கொண்டிருந்த நேரம் காலன் உன்
கைபிடித்து அழைக்க மறுகையை
நாணும் பிடித்தே இருவருமாய்
சென்றோமே. இனிய சொர்கத்தினுள்.

அந்நேரம் தட்டி எழுப்பியதே
அம்மாவின் கரமொன்று.
அலுவலகத்து நேரமானதென்று..
கண்டதெல்லாம் கனவா என
என் நினைவை நொந்து கொண்டே
கனவுக்கு வேண்டுகோள் விடுத்தேன்
கனவே கலையாதே ...........

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: