CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, December 14, 2007

நானும் அனிதாவும்-சிறுகதை

ஒரு நாள் நைட் 12 மணிக்கு வேலை முடிச்சுட்டு பைக்கில் பறந்து வீட்டுக்கு போய் கொண்டிருந்தேன்..
வீட்டுக்கு ஒரு மூண்ரு கிலோமீட்டர் தொலைவில் தான் நான் படித்த பள்ளி.அழகான மரங்களுடன் பூங்கா போன்ற அமைப்பு அந்த பக்கம் திரும்பி பார்க்கவைக்காமல் இருக்காது..அதே மாதிரி தான் இன்னைக்கும்
திரும்பி பார்த்தேன்..

அட என் தோழி அனிதா வெளிய வருகிறாள்..ஒரே ஆச்சர்யம்.இந்த ராத்திரி நேரத்தில் இவ இங்க என்ன பண்றான்னு..

ஹாய் அனி இங்க என்ன பண்ற இந்த நைட்ல..நான்

அட சும்மாடா எப்ப பாரு உங்ககூட விளையாடின ஞாபகம்.உங்களை வந்து பார்க்க முடியலை.அதான் இங்க வந்தேன்..அனி

ஆமாம் நம்ம பார்த்து ஏழு வருசம் ஆயிடுச்சு இல்ல.எனக்கு கூட அடிக்கடி உன் ஞாபகம் வரும் தெரியுமா.
நான்

அட போடா வாழ்க்கையே வெறுப்பா இருக்கு..பிரண்ட்ஸ்,அம்மா எல்லாரையும் பிரிஞ்சி தனியா இருக்கவே முடியலை..அதான் இப்படி வந்து பார்த்துட்டு போகலாமுன்னு வந்தேன் -அனி

ஏழு வருசமாச்சு இன்னும் அப்படியே தான் இருக்க.இன்னும் மாறலை நீ.. இப்ப நல்லா இருக்கியான்னு கேக்க தான் ஆசை ..ஆனால் முடியலை.உன் கூட யாராச்சும் பேசுவாங்களா நீ இருக்கர இடத்தில் என்றேன்

அப்படியே என் தோளில் சாய்ந்து 'டேய் யாரு என்ன தான் பேசினாலும் நம்ம லாம் விளையாடிட்டு இருந்த மாதிரி இருக்குமா ..எப்படிலாம் பேசுவோம்டா நாம..ஆண் பெண் மாதிரியா டா பழகுவோம்..அப்படிலாம் இன்னும் யாரும் வரலைடா..என்றாள்..

நான் எதுவுமே பேசமுடியாமல் ம்ம் கொட்டினேன்..

சரிடா ஆமாம் நீ லவ் பண்ணிட்டிருந்தியே அவளையே மேரேஜ் பண்னிட்டியான்னு கேட்டாள்.

எங்க எல்லாம் ஊத்திகிச்சு ஏதோ நானும் வேலைக்கு போனேன். வந்தேன்னு இருக்கறேன்.என்ன பண்ண..என்று வழக்கம் போல் அவகிட்டயும் இராமயணம் பாடி முடிச்சேன்..

ஏண்டா எனக்கு தான் எதுவும் சரியா அமையலை..உனக்குமா???????- அனி

ம்க்கும்..போடி லூசு நீ மட்டும் அவசரபடாம இருந்திருந்தா எல்லாமே நல்லபடியா நடந்திருக்கும்..நீயும் இப்ப உன் பையனோட வந்து என் வீட்டில் விருந்து சாப்பிட்டிருப்ப..இப்ப பாரு எத்தனையோ வருசம் கழிச்சு சந்திக்கிறோம்..என்றேன் நான்

சரி விடுடா.நான் தான் அவசர பட்டுட்டேன்.இப்ப யோசிச்சு என்ன பண்றது..-அனி

போடி லூசு..லைப்ப அனுபவிக்க தெரியாம தப்பு பண்ணிட்டு இப்ப புலம்புற- நான்

சரி சரி விடு .இன்னும் புராணம் பாடுறத விடலையா நீ...போற வழியில் தான சுடுகாடு அங்க இறங்கிக்குறேன்.கொஞ்சம் ட்ராப் பண்ணிடுடா- அனி பேசி முடித்தாள்..

ஆமாம் அனி செத்து ஏழு வருசமாயிடுச்சில்ல..கனவு கலைஞ்சு நாணும் எழுந்து ஒரு நிமிசம் உட்கார்ந்து மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டுகிட்டு இருந்தேன்..

3 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

Libi Maria Jack said...

It's really wonderful dear........... have a nice future!!

Libi Maria Jack said...

It's really wonderful dear........... have a nice future!!

saravanan said...

Nice story ..........