CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, February 27, 2008

காதலை நான் துரத்திய பொழுதுகள் பாகம் -2

அடடே என்னாங்க இந்த தொடர் எழுத ஆரம்பிச்சு ரொம்ப காய்ச்சல்ல படுத்துட்டேன்..இன்னிக்கு தான் கொஞ்சம் பரவாயில்லை..வந்து பாத்தா சபா செம கலை கட்டுது..ம்ம்ம் நான் இல்லைனாலே எல்லாரும் ஜாலியா தான்இருக்கீங்க போல,....

இருந்தாலும் நான் சும்மா இருப்பேனா??அன்னிக்கு நடந்த கதைய உங்க கிட்ட சொல்லாம விடமாட்டேன்னு முடிவோடவே ஆபிஸ் வந்துட்டேன் இன்னிக்கு....

ம்ம்ம் எங்க விட்டேன் அன்னிக்கு.............ஆம் ஞாபகம் வந்துடுச்சு..அந்த எஞ்ஜினியரிங் காலேஜ் பஸ் ஸ்டாப்...

இந்த இடத்தில் முக்கியமா நான் ஒரு ஆளை உங்கமுன்னாடி காட்டணும்.யார்ன்னு பாக்கறீங்களா..நானும் அவரை பார்த்ததில்லை..பெருசுங்கன்னு சொன்னா சண்டைக்கு வரமாட்டீங்களே
அக்காஸ்& அண்ணாஸ்.....[நம்ம பெருசுங்க சொல்லி தான் நான் அந்த ஆள் பற்றி கேள்வி பட்டிருக்கேன்....அதாங்க பிரம்மன்...படைத்தல் வேலை செய்வாராம் மேலுலகத்தில்...

என்ன ஆளுங்க அவரு ...எப்பா இன்னாமா ரசிச்சு ரசிச்சு படைக்கிறான் பெண்களை...அய்யோ அப்படியே கண்ல ஒத்திக்கலாம்னு போல கீதுங்க..
அதனால அவருக்கு ஒருதபா பெரிய தாங்க்ஸ் னு சொல்லிகினு இப்ப

அந்த பொண்ணோட அழகபத்தி வர்ணிக்கிறேன்..தூரத்தில் இருந்தே மெதுவா வண்டிய ஓட்ட ஆரம்பிச்சேன்..இன்னா அழகுப்பா ..அப்படியே செதுக்கி இருக்கானுக ..ஒவ்வொன்னையும் அவ்ளோ தான் இதுக்கு மேல
இன்னா வார்த்தை சொன்னாலும் அந்த புள்ளையோட அழக வெளிசொல்லமுடியும்னு எனக்கு தோணலைங்க...

அப்படியே கிட்ட போறேன் நான்..அட அந்த புள்ள லிப்ட் கேக்குது..
நம்ம புள்ளாண்டானுங்களும் நிக்கானுக...எங்கடா வண்டிய நிறுத்தினா
பொண்ணுங்களுக்கு மட்டும் நிறுத்தறானுக ன்னு கேவலமா லுக் வுடுவானுகளேன்னு போயிடலாம்னு நிறுத்தாம பொறுமையா வே போனேன்..

'சார் ரொம்ப அர்ஜண்ட்டா போகணும் பஸ்ஸே வரமாட்டேங்குது,பிளீஸ் தாம்பரம் வரைக்கும் விட்டுடுங்க '"அப்படீன்னு அவதாங்க...

அழகு கொஞ்சபடலாம் ,கெஞ்சவிடலாமாடா தணின்னு என் மனசாட்சி சொல்ல சக் சக்னு ரெண்டு ஜர்க் வழக்கமா நாம் பிரேக் போடுற ஸ்டைலே இதான்

"ஹையோ சாரிங்க,நான் தாம்பரம் போலியே,மறைமலைநகர் தான் போறேன்" என்ன பண்ண "அப்படியே வழிஞ்சுட்டு நிண்றேன்.

"பரவாயில்ல சார் ,வண்டலூர்ல விட்டுடுங்க அங்கயிருந்து நிறைய பஸ் போகும்,நான் போயிக்கறேன்" அவ மீண்டும்

அடேய் தணிகா அழகா பொறந்துட்டாளே இதாண்டா உனக்கு பிரச்சினை..இப்பா பாரு என்ன சொன்னாலும் இந்த பிகரு உன்னை விடமாட்டேங்குதுன்னு மனசு சொல்ல அப்படியே வழிஞ்சுகிட்டு .

'ஓகேங்க உக்காருங்க விட்டுடறேன் ன்னு முடிச்சேன்..

"ரொம்ப நன்றி சார்..நீங்க தப்பா எடுத்துக்கலன்னா என் பிரண்டும் கூப்பிட்டுக்கறேன்..என்ன சார்" என்றாள்

எனக்கு ஒரே குஷி,மச்சக்காரண்டா நீயி..ஒன்னு தெரிஞ்சி இப்ப ரெண்டா ..எதடா கரெக்ட் பண்றதுன்னு யோசிச்சு சரி எவ அழகா இருக்காளோஅ வ தான்..ஒரு நொடியில யோசிச்சு ம்ம் வரச்சொல்லுங்கன்னு பதிலும் போட்டாச்சு..

மனசுகுள்ள குஷி..ரெண்டு பிகரு..இன்னா பின்னா கன்னா பின்னான்னு
சந்தோசம் தாங்கல ...அப்படியே கம்பீரமா ஒரு லுக்கு விட்டேன் அங்க நின்ன
நம்ம புள்ளாண்டாங்களை..

நம்ம பிகரு கூப்பிட்டா அவ பிரண்டை..

"டேய் ராஜேஷ் சீக்கிரம் வாடா, பிரதரை பேசி கரெட் பன்றதுகுள்ள போதும் போதும்
னு ஆயிடுச்சு..நீ வேற லேட்டா வர "ன்னு முடித்தாள்

நான் என்ன பாவம் பண்ண சொல்லுங்க..இனிமே இங்க நான் சைலண்ட் தான்.
இதுக்கப்புறம் நடந்தது இன்னும் கொடுமை

"சாரிடி லேட்டாயிடுச்சு..நாம இப்ப எங்க போறோம்னு சொல்லவே இல்ல,ம்ம் "அவன்

"ஷாப்பிங்டா முண்டம் ..எனக்கு ஐ புரோ லிப்ஸ்டிக் லாம் வாங்கணும் ,எப்பவுமே மெட்ஸிங் கா ட்ரெஸ் பண்ணு மேக்கப் பண்ணுன்னு சொல்ல்றியள்ளே வா வந்து வாங்கி கொடு" அவள்

"வேணும்டி எனக்கு ..லிப்ட் கொடுத்தா என்னைய வயிறெரிய வெச்சு
போயும் போயும் இந்த வேலை பாக்கவெச்சுட்டியடி என்னைய " அது..

எனக்கும் விஜி அக்கா மாதிரி ஒரு பதிவு போடணும்னு ரொம்ப நாள் ஆசையா ..அதான் முடிக்கும் போது அவன் அவள் அதுன்னு முடிச்சுட்டேன்.

அவன் ராஜேஷ், அவள் பேரே சொல்லலை கடைசி வரைக்கும்,அது என் மனசாட்சி./...

என்னவோங்க ஆனா அன்னிக்கு சொதப்புச்சு..அடுத்த நாள் நான் டேரக்டா
கிரசண்ட் காலேஜ் வந்துட்டேன் இல்ல...இன்னிக்கு ஓகே தான் ..

கதை நாளைக்கு என்ன ...

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: