CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, February 27, 2008

காதலை நான் துரத்திய பொழுதுகள்-ஒரு தொடர்

காதல் இது வார்த்தை தானா ? இல்லை வாழ்க்கையா? என்ற கேள்விகுறியுடன் ஆரம்பித்தது என் வாழ்க்கை.என்னவோ காதல் என்ற வார்த்தையே ஒரு கெட்டபழக்கமாய் தான் தோன்றியது.பின்பு எனக்குள்
ஒரு பூகம்பம் வெடித்து காதல் பூ பூத்தது.இன்பமான அந்த காலங்களோடு நான் உலா வந்த பொழுதுகள்
எல்லாமே என் வாழ்க்கையின் ஒரு மைல் கல்லாய் பாதியிலே கடந்தது.

மைல்கல்லை தாண்டிய பின் அங்கு செல்லவே கூடாது என்று தான் எண்ணிகொண்டு காலம் நகர்த்திய பொழுதுகள் போய் சில நாளில் மைல் கல்லான காதலியின் நினைவுகள் வடுவாய் மாறி வலி குறைந்தது.
வலியில்லாமல் வடுவோடு நான் திரிந்தாலும் மனதில் மீண்டும் ஓர் ஆசை..எனக்கென ஒருத்தி எங்காவது
பிறந்திருப்பாள்.அவளோடு காதல் கதை பேசி மனம் முழுக்க அவளோடு வாழ்ந்து திருமணபந்தத்துக்குள் நுழைய வேண்டுமென்று..

இருந்தாலும் பாருங்க..கருமம் எந்த பொண்ண பாத்தாலும் ஜோடி போட்டுகிட்டு தான் சுத்திட்டு இருக்குங்க.
எனக்கு ஒரு யோசனை'

என்னடா இது நாமளும் தான் மூக்கு வரைக்கும் முடிய வச்சுகிட்டு அப்பப்ப ரஜினிகாந்த் மாதிரி தலைய கையால கோதிவிட்டுகிட்டு விக்டர் ஜி எக்ஸ் ல பறந்துட்டு இருக்கோம்.ஒரு பொண்ணுங்க கூட விளையாட்டுக்கு கூட பார்க்க மாட்டறாங்களே;ன்னு யோசிச்சு இருக்கும் போது தான் ஒரு பக்கா ஐடியா

நல்லா சவரம் பண்ணிகிட்டு காதல் கொண்டேன் தனுஷ் ரெண்டாவது பாதியில வரமாதிரி அழகா முடிவெட்டிகிட்டு ஆயுத எழுத்து சூர்யா மாதிரி ஜெர்கின் மாட்டிகிட்டு ஆபிஸுக்கு கிளம்பிட்டேனுங்க..
இன்னைக்கு எவ மாட்டினாலும் மடங்கிடுவான்னு நினப்போட...

போயிட்டே இருக்கும் போது அடடே நம்ம ஐடியா வேலை செய்ய ஆரம்பிடுச்சுடா சுள்ளான்னு எனக்குள்ள சொல்லிட்டு பொறுமையா ஓட்ட ஆரம்பிச்சேன் வண்டிய..

என்னன்னு பார்க்கறீங்களா.சும்மா சொல்லகூடாதுங்க மன்மதராசா சாயாசிங் மாதிரி சுடிதார் போட்டுகிட்டு.
ரெண்டு வீணைய தலைகீழா நடக்கவெச்சா எப்படி இருக்கும்..சும்மா போய்ட்டு பேக் சூப்பர்ன்னு சொல்லனும்னு தோனுச்சு..அப்பாடா அவ திரும்பி திரும்பி பார்க்கிறா ..நடந்து போறாளே லிப்ட் கேக்கணும் கேக்கணும்னு வேண்டிகிட்டே கிட்ட போணேங்க.

அப்பாடா இப்படி ஒரு அழகா ..சும்மா சொல்லகூடாதுங்க ..இப்பலாம் பொண்ணுங்க ரொம்ப அழகாவே தெரியறாங்க..கை மட்டும் போட்டாங்க ..பட்டுன்னு நிறுத்திட்டு எங்க போகணும்னு கேட்டேங்க..
அப்படியே ஒரு அதிர்ச்சி..வாய் முழுக்க சூப்பர் பாக்கை போட்டுகிட்டு இருக்கா.நான் கேட்டதும் அதை அப்படியே துப்பிட்டு கொஞ்சம் என்ன அடுத்த பஸ்ஸ்டாண்ட்ல இறக்கிவிட்டுடு மாமா ன்னு

ஆம்பளை குரலில் கேட்டானா(ளா) ..தணிகா இப்படி சொதப்பலா மாட்டிகிட்டியே ...ஹேய் நீங்க அதுவான்னு
கேட்டேனுங்க..ஏன் எங்களுக்கு லிப்ட் கொடுக்க மாட்டீங்களான்னு திரும்பவும்...

சரிடா சொதப்பனா என்ன மனிதாபி மானத்தின் அடிப்படையில் சரி வாங்க விடுறேன்னு சொன்னா.
பைக்ல ஏறி உக்கார்ந்தா எப்பா ட்ரிபிள்கிரவுன் ரம் நாத்தம் தாங்க முடியலை....
.
ஹோய் இறங்கு குடிச்சிருக்கியா.? முதல்ல இறங்கு ன்னு திட்டினேனுங்க..ஒயின்ஷாப் பக்கத்தில் இருந்து வரனே குடிக்காமயா வருவேன்..போடா .....................மாமா ன்னு திட்டிட்டா(ள்+ன்)

என்ன பண்ண சொல்லுங்க ..நான் இவ பின்னாடியே பாத்துட்டு வந்தேன் அவ வந்த ஒயின் ஷாப்ப பாக்காதது என் தப்பா..

பக்காவா கிளம்பி வந்து படு சொதப்பலாயிடுச்சே..என்னடா பண்ணலாம்னு யோசிச்சுட்டே போற வழியில
அட நம்ம இராமனுஜம் இஞ்ஜினியரிங்க் காலேஜ் பஸ் ஸ்டாண்ட்.

பஸ் ஸ்டாண்ட்ல என்ன நடந்துச்சு..உண்மையிலே இது அமைஞ்சுடும் போலிருக்கு.

பொழுதுகள் தொடரும்................

2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

ரிதன்யா said...

என்ன மாப்பு சுகமா?

சிட்டுக்குருவி said...

எப்படி அண்ணா இவ்ளோ பெரிய பெரிய கதைகளை எழுதறீங்க