CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, February 27, 2008

காதலர் தின வாழ்த்து

எங்கள் சிறகள்ளி தருகிறோம் நீவீர் விண்ணில்
பறக்கவென்று வானத்து பறவைகளும் கூச்சலிட்டனவே !

வியப்பில் கதிரவன் சட்டென்று விலகினவே தன்
உஷ்ணம் இவர் மேனியை தாக்கும் என எண்ணியே !

வண்ண மலர்சோலையது வாசம் கொண்டே சில்லென
தென்றலது இவர் மேனித்தொட்டு தழுவினவே !

கானக்குயில் பாடிட தோகைமயில் விரித்தாடி மகிழும்
மாலைப்பொழுதே இவர்கள் இன்புற்று மகிழவே
மனமுவந்து இந்த மண்ணிலே ஜொலித்ததுவே !

தாமரை தடாகத்து மலர்களும் மாலைப்பொழுதில்
பூத்து இவர்களை பார்த்து சிரித்து நின்றனவே!

மாற்றான் கண்பட்டு இவர்கள் மனமும் சட்டென்று
சலனம் கொள்ளும் என்றே இமைப்பொழுதில் இருளும் வந்ததுவே !

இருளைப்போக்கும் நோக்கு கொண்டே மின்மினிப்பூச்சிகள்
ஆனந்தத்தில் இவர்களையே சுற்றி இன்ப மயமாக்கினவே !

இருள்பூமி வேண்டா காதலரே நீவீர் என்னிடத்து
வாரும் என்றே விண்ணில் ஜொலித்த வெண்ணிலவும் வேண்டி நின்றதுவே !

இவர்கள் வரவைக் கண்ட விண்மீன்களும் வானப்போர்வையில்
வைரக்கல் பொதித்தாற் போல் காட்சி கொண்டே
இவர்களின் மண்ணுலக வாழ்வை மறக்க செய்தனவே !

தேனாறு பெருக்கெடுத்து ஓடியே எம் காதலர் அதில்
வண்ணமீன்கள் போல் துள்ளி குதித்து மகிழ்ந்தனரே !

உமக்காய் இயற்கை அளித்த பரிசே இமயமாய் கொட்டிக்கிடக்க
இச்சிறுகவிஞனின் பங்காய் இக்கவிதையை உங்கள்
பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் !!!

காவியம் போற்றும் காதலர்களே நீவீர் என்றும் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: