CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, February 19, 2008

முதல் எழுத்து.

எதுவுமறியா குழந்தையின் கையில்
சிக்குண்ட வெற்றுகாகித கசக்கலாய்
நானும் எறியப்பட்டேன் காதலறியதெரியா.
பொய்யான காதலி ஒருத்தியால்.

மக்கும் குப்பைகுள்ளும் மகசூல்
தரும் சக்தி உண்டென புரிந்தது
உன்னால் மீண்டும் சரிசெய்யபட்டு
எழுதப்பட்ட வெற்றுகாகிதமெனக்கு.

உளிகொண்ட சிற்பியின் கண்பட்ட
கல்லின் சிற்பமாய் ஜொலித்தேன்
நானும் உன்னால் எழுதப்பட்டபின்
சிறந்ததொரு அழகான கவிதையாய்

அழகிய கவிதைக்காய் சிலநேரம்
அலைரசிக்கும் கவிஞனாய்
உன்னால் பிறந்த நான் மீண்டும்
கிழித்தெறிய பட்டதன் நோக்கமென்னவோ.

உன்னால் அழகாக்க பட்டவன்
கிழித்தெறியும் போது பிரசவவலி
காணும் தாயினும் வலிகொள்வேன்
என்று அறியவில்லையா நீ..

இறந்தபின்னும் சாந்தியடையா
ஆன்மாவை போல் அலைகிறேன்
நானும் உன்னுடனான பழைய
எழுத்துக்களை தேடி.....................

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: