CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, February 22, 2008

அழுகையின் குரல்

வரையறை இல்லாத இன்பத்தில்
உயிர் ஜனித்த என்னை தூக்கி
வீசுகிறாள் பெற்றவளே..

வீசப்பட்ட எனக்கு சிலநேரத்தில்
பசிக்க பாலுக்காய் அழுகிறேன்.
அலங்கோல பெண்ணொருத்தி
அரவணைத்தாள் என்னையுமே..

அரவணைத்தவள் பாலூட்டநினையாமல்
அழுகையை காசாக்கி கொண்டாள்.
அழுகைக்கான அர்த்தம் அறியாமலே
அவளின் தட்டை நிரப்பும் உள்ளங்களே

அவளிடம் சொல்லி என் வயிறையும்
நிரப்ப சொல்வீர்களா???

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: