நெஞ்சம் முழுக்க
நிம்மதியுடன்
நிறைவான தூக்கம் இங்கே...
கண்கள் நிறைய
கனவுகள்
கருகிகிடக்கும் இங்கே...
சேராத காதல்கள்
சேர்ந்துவிடும் இங்கே...
சாதனையாளனும்
சதிகாரனும்
சங்கமாமிங்கே...
சாதனைகளின் முற்றுப்புள்ளி
சரித்திரங்கள் கற்கும் பள்ளி...
ஆம்
கற்றுக்கொடுக்காமல்
அனைவரும்
கற்கும்
கல்வி......இந்த
கல்லறை....
(அழியாத கவிபடைக்க ஆசைகொண்டே நினைவில் கொண்டு வந்தேன்...அழியும் மனிதவாழ்வை..அழியாத கல்லறையை)
Wednesday, September 26, 2007
கல்லறை என் பார்வையில்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:46 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Tuesday, September 25, 2007
என் பார்வையில் இயற்கை
மழை
மேக ஒற்றுமையில்
காற்றின் ஒற்றடம்
மழை....
காற்று
ஒட்டுமொத்த மரத்தின்
ஒட்டார சினுங்கல்
காற்று....
வானம்
அழகிய அண்டத்தின்
அழியாத
அதிசயப் போர்வை
வானம்....
சூரியன்
சுறுசுறுப்புக்கு எடுத்துகாட்டாய்
சுற்றி வரும்
நெருப்புக்கோளம்
சூரியன்....
நிலவு
நெருப்பின் நிழலாய்
நெஞ்செங்கும் அழகாய்
கனவெல்லாம்
உலாவரும்
சூரியனின் பிரதிபலிப்பு
நிலா........
(அழியாதகவி படைக்க ஆசைகொண்டு அழகான அழியாத அதிசய இயற்கை என் பார்வையில்
எடுத்துவந்தேன்...தொடரும்)
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:43 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Saturday, September 22, 2007
உண்மைகள் பல விதம்
நான் அவளை பார்த்தது உண்மை
அவள் சிரித்ததும் உண்மை
நான் காதல் சொன்னது உண்மை
அவள் ஏத்துகிட்டதும் உண்மை
நான் திருமணம் செய்யநினைத்தது உண்மை
அவள் வேறொருவனை மணம் செய்தது உண்மை
என் மனம் இறந்தது உண்மை
அந்த கிளி பறந்ததும் உண்மை
தோழியவள் வந்ததும் உண்மை
தைரியமவள் தந்ததும் உண்மை
நான் அவளை மறுத்தது உண்மை
நான் இன்னும் சிறந்தது உண்மை
சமூகம் நோக்கி பார்த்ததும் உண்மை
சதி கண்டு வேர்த்ததும் உண்மை
பசிகொண்ட வாழ்க்கை உண்மை
பழம் கொண்ட உணவு உண்மை
ஆறுநாளைக்கு அரைவேளை கஞ்சி உண்மை
ஒரு வேளைக்கு நூறு டாலர் உணவு உண்மை
பார்வையாளன் பணக்காரன் ஆவது உண்மை
வேர்வைசிந்துபவன் கூலிக்காரனாய் இருப்பதுண்மை
வசதிகொண்ட வாழ்வும் உண்மை
வலிகொண்ட ஏழை உண்மை
மரணமும் உண்மை
ஜனனமும் உண்மை
காலம் இருப்பது உண்மை
கருப்பன் ஜெயிப்பது உண்மை
காக்கிற கடவுள் உண்மை
அழிக்கிற காலன் உண்மை
இதிலெல்லாம் எது உண்மை
இதில் எதுவெல்லாம் ஏற்பாடு
இதை அறிவது உங்கள் பாடு
நான் எழுதியது இந்தஏடு
உயர்வை தேட உண்மையை நாடு
உடனே உயரும் உன் நாடு
உண்மை சொல்ல வந்தேனுங்க
தண்மையான வார்த்தை கொண்டு
வெண்மையான உள்ளங்கொண்டு
வன்மை எதிர்த்து போராடு
நன்மைவரும் உன்னோடு
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:27 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Thursday, September 20, 2007
ஒரு ஏழைப்பெண்ணின் அறைகூவல்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
நல்லதே செய்வோம்-உங்கள்
ஓலைவீடுகள்
ஒளிமயமாகும் என்றீர்கள்- ஆனால் உங்கள்
ஓட்டுச்சண்டைக்கு எங்கள்
ஓட்டைவீடுகளுக்கு
அள்ளிக்கொடுப்போம் என்று
கொள்ளிவைத்து விட்டீர்களே
எங்கள் வீட்டு
அடுப்பெரிய தானே வழிகேட்டோம்
இடுப்புகுழந்தையை எரித்தீரே..
உம்முடைய சதிக்கு எமக்கு
நிவாரணநிதி எதற்கு
கட்சிக்காக
தட்சணை கூட வாங்காமல்
உழைத்த என் கணவனுக்கு
குவாட்டர் வாங்கிகொடுத்து
குடிகாரனாக்கி விட்டீர்.
ஆயினும் அவன் செய்த
குறும்பால்
குழந்தை ஒருவன் வளர்கிறான்
வளர்க்கிறேன் அவனை
வல்லவனாக.உம்
வலிமையை
வலுவிழக்கச்செய்து
வாரிசுகளை வதைத்தெடுப்பான்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:28 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, September 19, 2007
என் தோழி.
குறிக்கோளுடன் பயணித்தவன்
குரங்குமனக் காதலியால்
கிறங்கடிக்கப் பட்ட போது
மரணத்தின் வாசல் சென்றவனை
கரம் பிடித்து
காரணம் கேட்டவள் என்னிடம்
நிவாரணமாய் பேசினவள்-நீ
சந்திக்க உறவுகள் உண்டு
சிந்திக்க உரிமைகள் உண்டு என என்
சிந்தனைக்கு உணர்த்தியவள்..
ஆரோக்கியம் பேணுபவள்
அன்னை என்றால்
அவளும் என் அன்னை.
அறிவுரை தருபவர்
அப்பா என்றால்
அவள் தான் என் அப்பா
அறிவு புகட்டுவார்
ஆசானென்றால்
அவள் என் ஆசான்
காப்பது தெய்வமென்றால்
அவளன்றோ தெய்வம்.
தோழியால் மட்டுமே
அனைத்துமாய்
தோன்ற முடியும்....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 2:51 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Tuesday, September 18, 2007
மரணமே உன்னை மறுதலிக்கிறேன்
மரணமே உன்னை
மறுதலிக்கிறேன்
மங்கிய என் வழ்வில்
மங்காத ஒளி போல்
மங்கையவள் நுழைந்ததும்
மகிழ்ச்சியில் நான்- அவள் என்
மணவாட்டியானாலும்
மரணமே உன்னை
மறுதலிக்கிறேன்...
என்
கண்ணகி அவளோடு
கள்ளமில்லா காதலோடு
கட்டிலின்பம் துய்த்து
கருவறைசிசு தரித்து
கண்ணன் அவன் பிறந்தாலும்
காலனே உன்னை
மறுதலிக்கிறேன்.
கைக்குழந்தை அவன்
கரம் பிடித்து
கால்நடை பழகி
கல்லூரி முடித்ததும் என்
கண்ணனுக்கோர் ராதையை
கரத்தினுள் கொடுத்தாலும்
மரணமே உன்னை
மறுதலிக்கிறேன்.
என்
பதுமையவள்
பல்லிழந்து முதுமையாய்
படுக்கையில் கிடந்தாலும்
பலமிழக்காத காதலோடு
பத்தினியவள் சுமங்கலியாய்
உன்னடி சேரும் போது
மரணமே என்னை
உனக்கு
விருந்தளிக்கிறேன்....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 8:27 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Friday, September 14, 2007
என் அழகிக்கு சமர்ப்பணம்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:38 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
எதுகைக்காக ஒரு கற்பனை
காலை எழுந்தவுடன்
சேலைப்பூவாம் உன்னை கண்டவுடன்
பாலைமனதாம் எனது
சோலைப்போலாகி விடும்..
ஆலைத்தொழில் முடித்து மறையும்
மாலைச்சூரியன் கூட மனமில்லாது
தான் மறைவான்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 8:29 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
என் காதலே.....
அய்யராத்து பொண்ணு நீயும்
ஒய்யாரமா நடந்து வந்த
மெய்யாகவே காதலிச்சோம்
உயிரைவச்சி மணம்முடிச்சோம் -எனக்காக
அயிரைமீனு குழம்புவெக்க பக்கத்துவீட்டு
மயிலக்காவை நீ கேக்குறீயே -உனக்காக
உயிரைக்கூட தருவேனடி
தயிரைத்தானா உண்ண மாட்டேன்..என்
தங்கமே
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 7:46 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, September 12, 2007
மாற்றம் வருமே இம்மாயை உலகில்
மாற்றங்கள் வந்துவிட்டால்
தோற்றங்கள் உருவெடுக்கும்
தோற்றங்கள் உருவானால்
ஏற்றங்கள் வந்துவிடும்
ஏற்றங்கள் வந்துவிட்டால்
சீற்றங்களும்
தோற்றுப் போகும்.
போற்றி வளர்ப்போம்- நம் புகழ்
பெற்ற வம்சத்தை
தேற்றிடுவார்கள் உலகத்தை...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:37 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
மோனைக்காக ஒரு உண்மை
நெஞ்சம் எல்லாம்
நெருப்பாய் கொதிக்கும் வேளையில்
நீ வந்ததும் மனம்
நெகிழ்ச்சியில்
நிறைந்து கிடக்க
நிழல் கூட
நிஜங்களாய் தெரிய
நீ வந்து
நீட்டினாய்
நின் திருமண அழைப்பிதழை....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:11 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
சமூக நிலை
சாதாரண விசயங்கள் தான்
சகலத்தையும் ஆட்டி படைக்கும்
சக்தியாய் மாறிவிட்டது..
சர்வேஸ்வரன்
சக்தியற்று போய்விட்டான்
சடையப்பன் தானே
சர்வமும் படைக்கும்
சக்தியை பெற்றுவிட்டான்
சாதீயமும்
சடங்குகளும்
சரிபாதி இங்கிருக்க
சதிசெய்யும் மானிடரோ
சங்கூத காத்திருக்க
சகதி நிறைந்த
சமூகம் வேறன்றி
சமத்துவம் தான் எங்கு வரும்
சந்தனம் தான் எங்கு வீசும்
சாதனை தான் எங்கு பிறக்கும்
சரித்திரம் தான் எப்படி படைக்கும்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:08 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
நண்பண் நீ இருக்க
தடங்கள் மாறினாலும்
தன்னம்பிக்கை மாறவில்லை
இன்னல்கள் வந்தாலும் என்
ஜன்னல்கள் மூடவில்லை
பிளவுகள் வந்தாலும் என் அறிவு
களவு போகவில்லை
நடைபாதை மறந்தாலும்
நல்வழிகாட்ட
நண்பண் நீ இருக்க
நானும் இருப்பேன்
நன்றி மறவாமல்
உனக்காக...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:06 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
மண்ணின் மைந்தனே-நீ தானே மன்னவன்
வாரிச் சுருட்டும்
வக்கிர மந்திரிகளிருக்க
வழிமொழிய
வகைதெரியா மக்களிருக்க
வாரிக்கொடுக்கும்
வள்ளல்களும்
வலுவிழக்க
வசதியில்லா ஏழை வாழ்வில்
வசந்தம் தான்
வந்திடுமா?
உதவிக்கு அலைந்தவன் கூட
பதவிக்கு வந்துவிட்டால்
கதவடைப்பான்
கதம் என்று சொல்லியே
மதம் பிடித்து
- ஆயினும் எம்மக்கள்
அகம் முழுக்க அவனை நினைத்து
யுகம் முழுக்க உழைத்தாலும்
நகமளவு கூட நினைக்காமல்
சுகமான வாழ்க்கை அவனுக்கு
சோகமான வாழ்க்கை எம்மக்களுக்கு
வெளிச்சம் வேண்டி
பளிச்சிடும் சின்னங்களில்
அளித்திடும் வாக்குகளால்
பகட்டான வாழ்வு உனக்கு
இக்கட்டான நிலை எமக்கு
பாவணை செய்வோன் உன்னிடம்
ஆவணத்தை அளித்துவிட்டு
கோவணத்தோடு
அவலமாய் எம்மக்கள்.
அவர் சார்பாய் அறை
கூவல் விடுகிறேன் உனக்கு....
-கேள்
மஞ்சத்திலே
கொஞ்சிக்கொண்டிருப்பவனே
பஞ்சத்தில் அடிபட்டு
மிஞ்சிய எம்மக்கள்
அஞ்சாமல் உனக்கு
நெஞ்சம் கொதித்தால்
தஞ்சம் புகுவாய் நீ
தரைக்குள்...
பாதகம் செய்வோனே
ஆதவன் அஸ்தமிக்கும் காலம்
அருகில் தான் உள்ளது.
எம்மக்களே
ஆதவன் உமக்கு
உதயமாக வேண்டுமானால்
மாதர் பின் அலையாதே
சோதனை முறியடிக்க
சாதனத்தை கையில் எடு
சரித்திரம் படைக்க சாமியை தேடாதே
தரித்திரம் ஒழி -உன்
விழித்திர முதலில்
தனித்திறம் வளர்
உயர்வுக்காக
ஊன் பலி கொடுக்காதே
உன் பலியாம் திறமையை கொணர்
ஊமையாய் இருந்துகொண்டு
ஆமையை குறை கூறாதே
தீமையை சுடு
வேசிபின் அலையாமல்
பாசிகளை களைய முற்படு
தூசிகளை துடைத்து
நேசிப்பாய் சமத்துவத்தை.
யோசிப்பாய் ஒரு நிமிடம்
வேர்வை சிந்துவது நீ
போர்வை தூக்கம் அவனுக்கு
சோர்வை காணும் நீ -தொலைநோக்கு
பார்வை பார் சரியான
தீர்வை காண்..
இனியும் பொறுக்காதே
அணி திரள்வீர்
பணி முடிப்பீர்
கனி நம் கையில்
மண்ணின் மைந்தனே
மன்னவன் என்று நம்
முன்னவன் வினவினான்
உன்னவன் நானும்
வழிமொழிகிறேன்
நீ
இம்மண்ணின் மைந்தனென்றால்
நீ தான்
மன்னவன்...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:03 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Thursday, September 6, 2007
நான் ரசித்தவை
சிநேகிதியே....!!!!
நீ எனக்கு தோழியாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?
உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட
உல்லாச வானில் பறந்திடு
உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்
பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
தோழன் என் தோளில்
தலை சாய்த்திடு
ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:53 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..